திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1882 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1882பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும் விகிர்தமான செயலை உடையவனே – நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது – இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது – உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ) 5
மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய் வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5
பதவுரை Show / Hide
மைத்தகரு குஞ்சி, Maiththakaru Kunchi - மைபோன்ற கறுத்த திருக்குழல்களையுடைய (- (அம்மம் உண்ணாய்))
மைந்தா, Maindhaa - சிறுக்கனே!
மா மருதூடு, Maa Marudhuudu - பெரிய மருதமரங்களினுடைய
நடந்தாய், Nadandhaai - தவழ்ந்து சென்றவனே!
விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக
வித்தகனே, Viththagane - ஆச்சரியசக்திவாய்ந்தவனே!
விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக
வெண்ணெய் விழுங்கும், Vennyei Vizhungum - வெண்ணெயை வாரி விழுங்கவல்ல
விகிர்தா, Vikirthaa - விலக்ஷணனே!
என் தன் கொங்கை, En Than Kongai - என்னுடைய ஸ்தனமானது
சுரந்து, Surandhu - பால்சுரந்து
இத்தனை போது அன்றி, Iththanai Podhu Andri - இதுவரையிலிருந்தது போலல்லாமல்
இருக்க கில்லா, Irukka Killa - இனி இருக்கமாட்டா
உத்தமனே, Uththamaney - சிறந்த குணசாலியே!
உலகு அளந்தாய், Ulaku Alandhai - உலகமளந்தபிரானே!