திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1882 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இனி இதுசெய்யான் -என்னும்படி படுக்கையிலே கிடந்தது-அவள் பேர நின்றவாறே வெண்ணெயை விழுங்கும் விகிர்தமான செயலை உடையவனே – நெடும் போது உண்டாயிற்று முலைக் கடுப்போடு இருக்கிறது – இத்தனை போது அல்லாதே என்னால் பொறுத்து பாடாற்றப் போகாது – உன் நோவிலும் தாய் நோவு அறியும்வன் அன்றோ –வேண்டும் அளவில் வந்து ஸ்பர்சித்த நீ அன்றோ) 5 | மைத்த கருங்குஞ்சி மைந்தா மா மருதூடு நடந்தாய்
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா
இத்தனை போதன்றி எந்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் யுலகளந்தாய் அம்மம் உண்ணாயே –10-4-5 | பதவுரை Show / Hideமைத்தகரு குஞ்சி, Maiththakaru Kunchi - மைபோன்ற கறுத்த திருக்குழல்களையுடைய (- (அம்மம் உண்ணாய்)) மைந்தா, Maindhaa - சிறுக்கனே! மா மருதூடு, Maa Marudhuudu - பெரிய மருதமரங்களினுடைய நடந்தாய், Nadandhaai - தவழ்ந்து சென்றவனே! விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக வித்தகனே, Viththagane - ஆச்சரியசக்திவாய்ந்தவனே! விரையாதே, Viraiyadhe - ஸாவகாசமாக வெண்ணெய் விழுங்கும், Vennyei Vizhungum - வெண்ணெயை வாரி விழுங்கவல்ல விகிர்தா, Vikirthaa - விலக்ஷணனே! என் தன் கொங்கை, En Than Kongai - என்னுடைய ஸ்தனமானது சுரந்து, Surandhu - பால்சுரந்து இத்தனை போது அன்றி, Iththanai Podhu Andri - இதுவரையிலிருந்தது போலல்லாமல் இருக்க கில்லா, Irukka Killa - இனி இருக்கமாட்டா உத்தமனே, Uththamaney - சிறந்த குணசாலியே! உலகு அளந்தாய், Ulaku Alandhai - உலகமளந்தபிரானே! |