திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1884 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை கையிலே அகப்பட்ட உன்னை ஆராக நினைத்தாய் – நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கும் வல்லபன் ஆனவனே – அப்படியே ஓர் ஏத்தம் போலே காணும் இவள் மகன் ஆனதுவும்) 7 | தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை யுண்ட நம்பீ
நன் மகள் ஆய் மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே –10-4-7 | பதவுரை Show / Hideவல் பேய்ச்சி, Val Paeychchi - கொடிய நெஞ்சுடையளான பூதனையானவன் (- (அம்மம் உண்ணாய்)) தன் மகன் ஆக, Than Magan Aaga - (உன்னைத் தன்புத்திரன் போல அபிமானித்து தான் முலை உண்ண கொடுக்க, Thaan Mulai Unna Kodukka - தான் தனது முலையை உன்வாயிலே மடுக்க, (அவ்வளவிலே) வல் மகன் ஆய், Val Magan Aay - வலிய ஆண்பிள்ளையாய் அவள் ஆவி வாங்கி, Aval Aavi Vaangi - அவளுயிரைக் கவர்ந்து முலை உண்ட நம்பீ, Mulai Unda Nambi - அவளது முலையை உண்ட பிரானே! நல் மகள் ஆய்மகளோடு, Nal Magal Aaymagalodu - சிறந்த மகளாகிய நப்பின்னைப் பிராட்டிக்கும் மணாளா, Manala - வல்லபனானவனே! என் மகனே, En Magane - எனக்குப் பிள்ளையாக வாய்த்தவனே! என் அம்மம், En Ammam - எனது ஸ்தந்யமாகிற சேமம், Semam - க்ஷேமத்தளிகையை உண்ணாய், Unnai - உண்ணவேணும். |