திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1886 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது – உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ) 9 | பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –10-4-9 | பதவுரை Show / Hideபெற்றம் தலைவன், Petram Thalaivan - பசுக்களுக்குத் தலைவனே! எம் கோமான், Em Koman - எங்கள் பெருமானே! பேரருளாளன் மதலாய், Perarulalan Mathalai - மஹாதயாளுவான நந்தகோபருடைய திருக்குமாரனே! சுற்றம் குழாம், Sutram Kuzham - பந்த ஸமூஹத்துக்கெல்லாம் இன கேரவே, Ina Kerave - யுவராஜாவானவனே! தோன்றிய தொல் புகழாளா, Thondriya Thol Pugazhala - எங்கும் பாவி விளங்குகின்ற நித்ய கீர்த்தியை யுடையவனே! கானம் தோறும், Kaanam Thoram - காடுகள் தோறும் கன்று இனம், Kandru Inam - கன்றுகளின் கூட்டங்களை மறித்து, Marithu - மடக்கி மேய்த்து திரிந்த, Thirindha - உலாவின களிறே, Kalire - கஜராஜமே! எம் பெருமான், Em Peruman - எனக்குப் பெருமையை விளைப்பவனே! ஏற்றுக்கு, Aetrukku - எதுக்காக என் அம்மம் உண்ணாத இருந்தாய், En Ammam Unnaadha Irundhai - என் முலைப்பாலை உண்ணாமலிருக்கின்றாய்? |