திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1886 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1886பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கன்றின் உடைய திரள்-ஓன்று இரண்டு போராது –கன்றுகளை திரளாக மறித்து காட்டிலே அங்கே இங்கே தட்டித் திரியும் போது ஒரு மத்தகஜம் உலாவுமா போலே யாயிற்று இருப்பது – உனக்கு விடாய் இல்லாமையோ – உனக்கு முலை தாராது ஒழியும் போது நான் தரிப்பனாயோ) 9
பெற்றம் தலைவன் என் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்து இளங்கோவே தோன்றிய தொல் புகழாளா கற்றினம் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம்பெருமான் இருந்தாயே –10-4-9
பதவுரை Show / Hide
பெற்றம் தலைவன், Petram Thalaivan - பசுக்களுக்குத் தலைவனே!
எம் கோமான், Em Koman - எங்கள் பெருமானே!
பேரருளாளன் மதலாய், Perarulalan Mathalai - மஹாதயாளுவான நந்தகோபருடைய திருக்குமாரனே!
சுற்றம் குழாம், Sutram Kuzham - பந்த ஸமூஹத்துக்கெல்லாம்
இன கேரவே, Ina Kerave - யுவராஜாவானவனே!
தோன்றிய தொல் புகழாளா, Thondriya Thol Pugazhala - எங்கும் பாவி விளங்குகின்ற நித்ய கீர்த்தியை யுடையவனே!
கானம் தோறும், Kaanam Thoram - காடுகள் தோறும்
கன்று இனம், Kandru Inam - கன்றுகளின் கூட்டங்களை
மறித்து, Marithu - மடக்கி மேய்த்து
திரிந்த, Thirindha - உலாவின
களிறே, Kalire - கஜராஜமே!
எம் பெருமான், Em Peruman - எனக்குப் பெருமையை விளைப்பவனே!
ஏற்றுக்கு, Aetrukku - எதுக்காக
என் அம்மம் உண்ணாத இருந்தாய், En Ammam Unnaadha Irundhai - என் முலைப்பாலை உண்ணாமலிருக்கின்றாய்?