திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1887 | பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம்) 10 | இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி
செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும்
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10 | பதவுரை Show / Hideஎழில ஏந்து தோள் கலிகன்றி, Ezhil Aenthu Thol Kalikanri - அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார் இம்மை இடர்கெட வேண்டி, Immai Idarkeda Vendi - இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி செம் கண் நெடியவன் தன்னை, Sem Kan Nediyavan Thannai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி செம்மை நூல் பனுவல் கொண்டு, Semmai Nool Panuval Kondo - சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும், Amma Um Enru Uraikkindra Ivai Paadal Aindhum Aindhum - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும் மெய்ம்மை, Meimmai - யதார்த்தமான அன்பு பொலிய மனத்து வைத்து, Manaththu Vaiththu - நெஞ்சிற்கொண்டு ஏத்த, Aetha - அநுஸந்திக்குமளவில் விண்ணவர் ஆகலும் ஆம், Vinnavar Aagalum Aam - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும். |