திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1887 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1887பெரிய திருமொழி || (10-4–சந்தமலர் க்குழல்) - (யசோதை கண்ணனை அம்மன் உண்ண அழைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அம்மம் உண் என்று சொன்ன இப்பத்தையும் –அந்த பாவ வ்ருத்தியோடே சொல்லுவாருக்கு வந்தேறியான முக்தர் ஆனவர்கள் அன்றிக்கே அஸ்ப்ருஷ்ட சம்சாரிகளான ஸ்ரீ நித்ய சூரிகளோடே ஒக்க தரம் பெறலாம்) 10
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கண் நெடியவன் தன்னை அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலுமாமே –10-4-10
பதவுரை Show / Hide
எழில ஏந்து தோள் கலிகன்றி, Ezhil Aenthu Thol Kalikanri - அழகை ஏந்தியிருக்கின்ற தோள்களையுடையவரான திருமங்கையாழ்வார்
இம்மை இடர்கெட வேண்டி, Immai Idarkeda Vendi - இப்பிறவியிலுண்டான இடரெல்லாம் அழியவேண்டி
செம் கண் நெடியவன் தன்னை, Sem Kan Nediyavan Thannai - புண்டரீகாக்ஷனான ஸர்வேச்வரனை நோக்கி
செம்மை நூல் பனுவல் கொண்டு, Semmai Nool Panuval Kondo - சிறந்த சாஸ்த்ரமாகிய அருளிச்செயலைக் கொண்டு
அம்மம் உண் என்று உரைக்கின்ற இவை பாடல் ஐந்தும் ஐந்தும், Amma Um Enru Uraikkindra Ivai Paadal Aindhum Aindhum - ‘முலைப்பாலுண்ண வா’ என்று அழைப்பதான இப்பத்துப் பாசுரங்களையும்
மெய்ம்மை, Meimmai - யதார்த்தமான அன்பு பொலிய
மனத்து வைத்து, Manaththu Vaiththu - நெஞ்சிற்கொண்டு
ஏத்த, Aetha - அநுஸந்திக்குமளவில்
விண்ணவர் ஆகலும் ஆம், Vinnavar Aagalum Aam - நித்யஸூரிகளாகப் பெறுதலும் அவர்கட்கு நேரும்.