திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1889 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1889பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தயிரையும் நெய்யையும் களவு கண்டு புசிக்கை போராததொரு செயல் இறே இப்படி போராத செயலைச் செய்தோம் என்று லஜ்ஜிக்கவும் அறியாதே தனக்கு பொருந்தின செயலைச் செய்தானாய் அத்தாலே என்னை எழுதிக் கொண்டு இருக்கிறவனே – தனக்குத் தகுதியான செயலைச் செய்தானாய் செய்ததுக்கு லஜ்ஜிக்கவும் கூட அறியாத மௌக்த்த்யத்திலே யாயிற்று இவளும் தோற்றது) 2
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய் யுண் டே ஏய் எம்பிராக்கள் இரு நிலத்து எங்கள் தம் ஆயர் அழக வடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-2
பதவுரை Show / Hide
தாயர் மனங்கள் தடிப்ப, Thaayar Manangal Thadippa - தாய்மாருடைய நெஞ்சு துடிக்கும்படியாக (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்))
தயிர் நெய் உண்டு, Thayir Ney Undu - தயிரையும் நெய்யையும் வாரி யமுதுசெய்து
ஏய், Ey - பொருத்தமான காரியம் செய்த்தாக நினைத்திருக்கிற
எம் பிராக்கள், Em Pirakkal - எம்பெருமானே!
இரு நிலத்து, Iru Nilathu - விசாலமான இப்பூமண்டலத்திலே
எங்கள் தம் ஆயர், Engal Tham Aayar - எங்கள் இடைச்சாதிக்குள்ளே
அழக, Azhaga - அழகிற் சிறந்தவனே!
அரவிந்தம், Aravindham - தாமரைப் பூப்போன்ற
அடிகள் வாயவனே, Adigal Vaayavane - திருவடிகளையும் திருமுகத்தையு முடையவனெ!
மால் வண்ணனே, Maal Vannane - கரிய திருமேனியனே!