| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 189 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 8 | சீமாலி கனவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சி பூ சூட்ட வாராய் 2-7-8 | சீ மாலிகன் அவனோடு, See maligan avanodu - மாலிகன் என்ற பெயரை யுடையவனோடு தோழமை கொள்ளவும், Thozhamai kollavum - ஸ்நேஹம் செய்து கொள்ளுதற்கும் வல்லாய், Vallaai - வல்லவனாய் அவனை, Avanai - அந்த மாலிகனை நீ, Nee - நீ சாம் ஆறு எண்ணி, Saam aaru enni - செத்து போம் வழியையும் ஆலோசித்து சக்கரத்தால், Sakkarathal - சக்ராயுதத்தினால் தலை கொண்டாய், Thalai kondai - தலையையுமறுத்தாய்; ஆம் ஆறு, Aam aaru - நடத்த வேண்டியவைகளை அறியும், Ariyum - அறிய வல்ல பிரானே, Piraane - ப்ரபுவே! அணி, Ani - அழகிய அரங்கத்தே, Arangathey - கோயிலிலே கிடந்தாய், Kidandhaai - பள்ளி கொண்டிருப்பவனே! ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய், Emaatram ennai thavirthaai - இது தன்னாலே இறே இவர் ஏமாற்றத்தைப் பெரிய பெருமாள் தவிர்த்து அருளிற்றும் இருவாட்சி பூ சூட்ட வாராய், Iruvaatchi poo sootta vaaraai - இருவாட்சி பூ சூட்ட வாராய் |