திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1891 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அங்கு அருகும் உறவு முறையாய் இருப்பார் ஒருவரும் இன்றிக்கே லோகத்திலும் உறவு முறை இன்றிக்கே இருக்கிற மற்றுள்ளார் எல்லாரும் அஞ்சும்படியாக போய் – ஜாத்யுசிதமான வ்ருத்தியை உடையவனே கன்றுகள் மேய்க்குமவனே) 4 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-4 | பதவுரை Show / Hideபெற்றார், Petraar - தாய் தந்தையருடைய (- (சப்பாணி கொட்டாய்)) தளை, Thalai - கால்விலங்கு கழல, Kazhala - கழன்று விழும்படி பேர்ந்து, Perndhu - வந்தவதரித்து அங்கு, Angu - அவ்விடத்தில் அயலிடத்து உற்றார் ஒருவரும் இன்றி, Ayaliadathu Utrar Oruvarum Inri - நெருங்கின உறவுமுறையார் ஒருவருமில்லாமற்போக உலகினில் மற்றாரும் அஞ்ச, Ulaginil Matraarum Anja - உலகத்திலுள்ள எல்லாரும் அஞ்சும்படியாக வஞ்கம் பெண் நஞ்ச உண்ட, Vanjkam Pen Nanja Unda - வஞ்சனையே வடிவாக வந்த பூதனையின் (முலையில் தடவின) விஷயத்தை அழுது செய்தருளின கன்று ஆயனே, Kandru Aayaney - கோபாலகிருஷ்ணனே! கார் வண்ணனே, Kaar Vannane - காளமேகநிறத்தனே! |