திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1892 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1892பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு பருத்த அப்பங்களை இடைச்சிகள் தருவர்கள் –அவர்கள் பேரிட்டு எங்களை வாழ்விக்க வேணும் – கண்டு கொண்டு இருக்க வேண்டும் கைகளால் சப்பாணி கொட்ட வேணும்) 5
சோத்தென நின்னைத் தொழுவன் வரம் தரப் பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி –10-5-5
பதவுரை Show / Hide
பேய்ச்சி முலை உண்ணட பிள்ளாய், Peychchi Mulai Unnada Pillai - பூதனையின் முலையை உறிஞ்சியுண்டே கண்ணபிரானே! (- (ஓர் ஆயிரம் சப்பாணி) (தடங்கைகளால் சப்பாணி கொட்டாய்))
வரம் தர, Varam Thara - என் கோரிக்கையை நீ நிறைவேற்றுதற்காக
நின்னை, Ninnai - உன்னை
சோத்தம் என, Soththam Ena - சோத்தமென்று சொல்லிக்கொண்டு
தொழுவன், Thozhuvan - தொழுகின்றேன்
ஆய்ச்சியர், Aaychiyar - இடைச்சிகள்
பெரியன அப்பம் தருவர், Periyana Appam Tharuvar - பெரிய அப்பங்களை உனக்குக் கொடுப்பர்கள்,
அவர்க்காக சாற்றி, Avarkkaaga Saartti - அவர்களுக்காக வென்று ஒரு வியாஜமிட்டு