திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1894 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1894பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிள்ளைத் தனத்திலே கண் அழிவு அற்று இருக்கச் செய்தே உன்னை நோக்கித் தந்து உபகரித்தவனே – அன்று பூதனை தன்னை முடித்து உன்னை நோக்கித் தந்த நீ இன்று நான் சொல்லிற்று செய்ய வேண்டாவோ) 7
புள்ளினை வாய் பிளந்து பூங்குருந்தம் சாய்த்துத் துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே கொட்டாய் சப்பாணி –10-5-7
பதவுரை Show / Hide
புள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்தெறிந்து (- (சப்பாணி கொட்டாய்,) (பேய் முலை உண்டானே! சப்பாணி))
பூ குருந்தம் சாய்த்து, Poo Kurundham Saaythu - பூத்திருந்த குருந்த மரத்தைச் சாய்த்து முறித்து
துள்ளி விளையாடி, Thulli Vilaiyaadi - நிலத்தில் நில்லாமல் விளையாடல்களைச் செய்து
தூங்கு உறி வெண்ணெயை, Thoongu Uri Vennaiyai - தொங்குகின்ற உறியிலுள்ள வெண்ணெயை
அள்ளிய, Alliya - வாரியெடுத்த
கையால், Kaiyala - கைகளாலே
அடியேன் முலை நெருடும், Adiyen Mulai Nerudum - என்னுடைய முலையை (ப்பால் சுரப்பதற்காக) நெருடுகின்ற
பிள்ளை பிரான், Pillai Piraan - பிள்ளையாயும் பிரவுவாயுமிருப்பவனே!