திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1896 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூதனை வரும் அளவும் ஆறி இருந்து கிட்டிக் கொண்டு தப்பாத படி மேல் விழுந்து பிடித்து முலை உண்டு அவளை முடித்து தன்னைக் காத்த மகோதாரனே – உதாராராய் இருப்பாருக்கு அபேஷிதங்களை எல்லாம் செய்ய வேண்டாவோ) 9 | கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி உதைத்திட்டுத் தாயாய் வருவாளை
மெள்ளத் துடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி –10-5-9 | பதவுரை Show / Hideகள்ளம் குழவி ஆய், Kallam Kuzhavi Aayi - மாயக் குழந்தையாய்ப் பிறந்து சகடத்தை, Sakadatthai - (அஸுரன் ஆவேசித்திருந்த வண்டியை காலால் தள்ளி உதைத்திட்டு, Kaalal Thalli Uthaithittu - திருவடியாலே தள்ளி யுதைத்தவனாயும் தாய் ஆய் வருவாளை, Thaai Aayi Varuvaalai - தாய்வேஷம் பூண்டு வந்த பூதனையை மெள்ள தொடர்ந்து பிடித்து, Mella Thodarndupidithu - விதானித்திருந்து மேல் விழுந்து பிடித்து ஆர் உயிர், Aar Uyir - (அவளது) அருமையான உயிரை உண்ட, Unda - கவர்ந்தவனான வள்ளலே, Vallale - உதாரனே! சப்பாணி கொண்டாய், Chappaani Kondaai - பால் வண்ணனே! சப்பாணி கொட்டாய் |