திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1897 | பெரிய திருமொழி || (10-5–பூங்கோதை) - (சப்பாணி கொட்ட வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பேராளன் –ஸ்ரீ நம் ஆழ்வார் -சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு -என்னா-அநந்தரம் -யாவர் நிகர் -என்றாப் போலே கவி பாடப் பெற்ற ப்ரீதி பிரகர்ஷத்தாலே தாமே தம்மைப் புகழ்ந்தால் போலே பேராளன் -என்கிறார் – இவருடைய திரு உள்ளத்தை விட்டு பிரியாதே இங்கே நித்ய வாஸம் பண்ணுகையால் உள்ள சம்பத்தை உடையனான இது – ஸ்ரீ பிராட்டியை தனக்கு உடையனானதுக்கு மேலே ஒன்றாயிற்று – இதுக்கு பல சுருதி சொல்லாமல் விட்டது தம்மை அறியாமை இவ்வனுபவம் தானே பிறருக்கும் பலமாய் இருக்கிறது) 10 | காரார் புயல் கைக்கலி கன்றி மங்கையர் கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம் கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தாராளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி –10-5-10 | பதவுரை Show / Hideகார் ஆர் புயல் கை, Kaar Aar Puyal Kai - கார்காலத்து நிறையநீர் கொண்டெழுந்த மேகம் போன்ற ஔதார்யமுடையவராய் (- (சப்பாணி கொட்டாய்) (சப்பாணி கொட்டாய்)) மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவராய் பேராளன், Peraalan - பெருமை பொருந்தியவரான கலி கன்றி, Kali Kankri - திருமங்கையாழ்வாருடைய நெஞ்சில், Nenjil - திருவுள்ளத்திலே பிரியாது, Priyaadhu - ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் இடம் கொண்ட, Idam Konda - நித்யவாஸம் பண்ணுகின்ற சீரானா, Seerana - சீர்மை பொருந்தியவனே! செம் தாமரை கண்ணா, Sem Thaamarai Kanna - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையவனே! தண் துழாய் தார் ஆளா, Than Thuzhai Thar Aala - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்துள்ளவனே! தட மார்வா, Thad Marvaa - விசாலமான திருமார்வை யுடையவனே! |