Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 190 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
190பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 9
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9
அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி)
அமர்ர்கள், Amarrgal - தேவர்கள்
சூழ, Soozha - சூழ்ந்திருக்க
அங்கு, Angu - அவர்கள் நடுவில்
அண்டத்து, Andhathu - பரம பதத்தில்
இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே!
தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய
நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில்
உறைவாய், Uraivaai - வஸிப்பவனே!
தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு
மணவாளா, Manavaalaa - கொழுநனே!
உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும்
உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு
ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில்
துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே!
நான், Naan - நான்
உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து
உகக்க, Ugakka - மகிழும்படி
கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய்