| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 190 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 9 | அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணி உள் அங்கு இருந்தாய் தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆல் இலையில் துயில் கொண்டாய் கண்டு நான் உன்னை உகக்க கரு முகைப் பூ சூட்ட வாராய் -2-7-9 | அத்தாணியுள், Atthaaniyul - அருகான இடத்திலே (ஸேவிக்கும்படி) அமர்ர்கள், Amarrgal - தேவர்கள் சூழ, Soozha - சூழ்ந்திருக்க அங்கு, Angu - அவர்கள் நடுவில் அண்டத்து, Andhathu - பரம பதத்தில் இருத்தாய், Iruththaay - வீற்றிருப்பவனே! தொண்டர்கள், Thondargal - அடியார்களுடைய நெஞ்சில், Nenjil - ஹ்ருதயத்தில் உறைவாய், Uraivaai - வஸிப்பவனே! தூ மலரான், Thoo malaran - பரிசுத்தமான தாமரை மலரைப் பிறப்பிடமாக வுடைய பிராட்டிக்கு மணவாளா, Manavaalaa - கொழுநனே! உலகினை ஏழும், Ulaginaai yezhum - (பிரளய காலத்தில்) ஏழு உலகங்களையும் உண்டிட்டு, Undittu - உண்டு விட்டு ஓர் ஆல் இலையில், Or aal ilaiyil - ஒராவிலையில் துயில் கொண்டாய், Thuyil kondai - யோக நித்திரையைக் கொண்டவனே! நான், Naan - நான் உன்னை கண்டு, Unnai kandu - (நீ பூச் குடியதைப்) பார்த்து உகக்க, Ugakka - மகிழும்படி கருமுகைப் பூ சூட்ட வாராய், Karumukai poo sootta vaaraai - கருமுகைப் பூவை சூட்டவாராய் |