திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1901 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை கொள்ளுகைக்காக தர்ச நீயமான வாமன வேஷத்தை உடையனாய் கொண்டு க்ருத்ரிமித்து லோகத்தை அளந்து– மகா பலியைச் சிறையில் இட்ட ஆண் பிள்ளை கிடீர் – ஓர் அபலை இட்ட சிறை விட்டுக் கொள்ள மாட்டாதே இருக்கிறான்) 4 | தளர்ந்திட்டு இமையோர் சரண் தா வெனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால்
பிளைந்திட்டு அமரர்க்கு அருள் செய்துகந்த பெருமான் திருமால் விரி நீருலகை
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித் தொரு மாண் குறளாய்
அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-4 | பதவுரை Show / Hideஇமையோர், Imaiyor - தேவர்கள் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) தளர்ந்திட்டு, Talarntittu - (அசுரர்களாலே நெருக்குண்டு) மிகவும் தளர்ச்சியடைந்து சரண் தா என, Saran Ta En - ‘நீ எமக்கு ரக்ஷகனாக வேணும்’ என்று பிரார்த்திக்க, தான் சரண் ஆய், Tan Saran Ay - தான் ரக்ஷகனாக நின்று முரணாயவனை, Muranayavanai - பெருமிடுக்கனான இரணியனை உகிரால், Ukiral - நகங்களாலெ பிளந்திட்டு, Pilantittu - கிழித்துப்போட்டு அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு அருள் செய்து, Arul Seytu - கிருபைபண்ணி உகந்த, Ukanta - திருவுள்ளமுவந்த பெருமாள், Perumal - ஸர்வேச்வரனாய் திருமால், Tirumal - திருமகள் கொழுநனாய், வளர்ந்திட்ட தொல் சீர், Valarntitta Tol Sir - மேன்மேலும் வளர்கின்ற அதிக ஸம்பத்தையுடைய விறல், Viral - பலிஷ்டனான மாவலியை, Mavaliyai - மஹாபலியை மண் கொள்ள, Man Kolla - பூமியைக் கொள்ளும் பொருட்டு ஒரு மாண் குறள் ஆய், Oru Man Kural Ay - அத்விதீயனான ப்ரஹ்மசாரி வாமன்னாய் வஞ்சித்து, Vancittu - சிறு காலைக்காட்டி ஏமாத்தி விரிநீர் உலகை, Virineer Ulagai - கடல்சூழ்ந்த வுலகங்களை அளந்திட்டவன் காண்மின், Alandittavan Kaanmin - அளந்து கொண்டவனன்றோ |