திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1904 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெருக்கிக் கொண்டு தோற்றின ஸ்ரீ வானர வீரர்களையே சேனையாகக் கொண்டு மலைகளை இட்டு நிரம்பும் படியாக பாய்ச்சி கடலை அணை செய்தவன் கிடீர் – மஹத் தத்வமான கடலை அணை கட்டினவன் கிடீர் இன்று ஒருத்தி கட்டு அவிட்க மாட்டாதே இருக்கிறான்) 7 | படைத்திட்டது இவ்வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயராய வெல்லாம்
துடைத்திட்ட வரைத் தனக்காக வென்னத் தெளியா வரக்கர் திறல் போயவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம கடலை
அடைத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-7 | பதவுரை Show / Hideமுன நாள், Muna Naal - முன்பொருகாலத்தில் (- (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) இ வையம், I Vaiyam - இவ்வுலகங்களை படைத்திட்டு, Padaiththittu - (கரண களேபரங்கள் கொடுத்து) ஸ்ருஷ்டித்து அது, Adhu - அவ்வுலகம் உய்ய, Uyya - உஜ்ஜீவிப்பதற்குறுப்பாக பணிந்து, Panindhu - திருவடிகளிலே விழுந்து ஏத்த வல்லார், Aetha Vallar - அதிக்கவல்லவர்களுடைய துயர் ஆய எல்லாம், Thuyar Aaya Ellam - துன்பமென்று பேர்பெற்றவற்றையெல்லாம் துடைத்திட்டு, Thudaiththittu - போக்கி அவரை, Avarai - அப்படிப்பட்டவர்களை தனக்கு ஆக்க என்ன, Thanakku Aakka Enna - தனக்கே உரியவராக ஆக்கிக் கொள்ள நீனைத்தவளவிலே தெளியா, Theliya - அத்திருவுள்ளத்தை ஸஹிக்க மாட்டாமல் கலங்கித் தீங்கிழைத்த அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்களுடைய திறல், Thiral - மிடுக்கு மிடைத்திட்டு எழுந்த, Midaithittu Ezhuntha - நிபிடமாகத் திரண்ட குரங்கை, Kurangai - வானரவீரர்களை படை ஆ, Padai Aa - சேனையாகக்கொண்டு விம்ம, Vimma - (கடல்) நிரம்பும்படி விலங்கள், Vilangal - மலைகளை புக பாய்ச்சி, Puga Paaychchi - பரப்பியிட்டு கடலை, Kadalai - ஸமுத்ரத்தை அடைத்திட்டவன் காண்மின், Adaithittavan Kaanmin - தூர்த்தவனான பெருமானன்றோ |