திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1905 | பெரிய திருமொழி || (10-6–எங்கானும்) - (மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கண்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த வில்லை முறித்து அவளோட்டை சம்ச்லேஷ சுகத்தை ப்ரீதியோடு லபித்து யுவ ராஜாவாய் ஒருவராலும் சலிப்பிக்க ஒண்ணாத கடலை அணை கட்டி இலங்கையானது ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படியாக ராவணன் உடைய முடியோடு தோள் தாள் இவை துணியும்படி அறுத்தவன் கிடீர் – இன்று ஒரு அபலை கட்டு அவிழ்க்க மாட்டாது இருக்கிறான்) 8 | நெறித்திட்ட மென் கூழை நன்னேரிழையோடு உடனாய வில்லென்ன வல்லேயதனை
இருத்திட்டவள் இன்பம் அன்போடணைந்தித்திட்டு இளங் கொற்றவனாய்த் துளங்காத முந்நீர்
செறித்திட்டி லங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டாப்புண்டு இருந்தவனே –10-6-8 | பதவுரை Show / Hideநெறித்திட்ட, Nerithitta - நெறித்திராநின்ற (- (பிற வனவாஸம் நேர்ந்த பின்பு) (இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்)) மென், Men - மிருதுவான கூழை, Koozhai - மயிர்முடியையும் நல் நேர் இழையோடு, Nal Naer Izhaiyodu - விலக்ஷணமாய் அழகிய ஆபரணங்களையு முடையளான ஸீதையோடு உடன் ஆய, Udan Aaya - கூடப்பிறந்த அல் அன்ன, Al Anna - இருண்ட வில் அதனை, Vil Adhanai - அந்தவில்லை இறுத்திட்டு, Iruththittu - முறித்துவிட்டு அவள் இன்பம், Aval Inbam - அவனோடு கலவியால் உண்டாகுமின்பத்தை அன்போடு, Anbodu - ப்ரீதியுடனே அணைத்திட்டு, Anaithittu - லபித்து இள கொற்றவன் ஆய், Ila Kotravan Aay - யுவராஜாவாயிருந்து துளங்காத, Thulangadha - ஒருவராலும் அசைக்க முடியாத முந்நீர், Munnir - கடலை செறித்திட்டு, Serithittu - அணைகட்டி இலங்கை மலங்க, Ilankai Malanga - லங்கை கலங்கும்படியாக அரக்கன், Arakkan - இராவணனுடைய செழு, Sezhu - செழித்த நீள், Neel - நீண்ட தோள், Thol - தோள்களும் தாள், Thal - கால்களும் துணிய, Thuniya - சிதிலமாகும்படியாக அறுத்திட்டவன் காண்மின், Aruthittavan Kaanmin - அறுத்தொழித்தவனன்றோ |