Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 191 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
191பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 10
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10
செண்பகம், Senbakam - செண்பகப் பூவும்
மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும்
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும்
எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும், Poovum - மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்;
இன்று, Indru - இப்போது
இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி
வா, va - வருவாயாக
என்று, Endru - என்று
பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி, Aaychi - யசோதை
மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும்
பத்தே, Patthe - ஒருபத்தே!