Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 191 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
191பெரியாழ்வார் திருமொழி || (2-7 பூச்சூடல்) - இந்தத் திருமொழிக்குப் பலஞ்சொல்லாதொழிந்தது, இப்பத்துப் பாசுரங்களும் ஸ்வயமே ரஸ்யமாய் போக்யமாயிருக்குமென்பதற்கு. பத்தே – ஏகாரம் – இப்படியும் பாடவிருக்கப் பெறுவதே! என்று இத்திருமொழியின் போக்யதையைக் கொண்டாடியதைக் காட்டும். எண்பகர் – சூட்டிக்கொள்ளலாமென்று சாஸ்த்ரங்களில் எண்ணப்பட்ட என்றுமாம். கொணர்ந்தேன் = ‘கொணா, என்ற பகுதி குறுக்கலும் விரித்தலுமாகிற விகாரங்களைப்பெற்று ‘கொணர், என நின்றது. பகர்மண் – வாமநனாய்ச்சென்ற திருமால் ‘எனக்கு ­வடி மண் தா, என்று சொல்லப்பெற்ற பூமியை என்றாவது, ‘­வடிமண் அளந்துகொள், என்று மஹாபலி உடன்பட்டுச் சொன்ன பூமியை என்றாவது கொள்க. ஆரேனும் ஒன்றைச் சொல்லிலும் ராகத்திலே சேரும்படி சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரென்பது ‘பண்பகர் வில்லிபுத்தூர், என்பதன் கருத்து. உரைசெய்த – பலவின்பால் இறந்தகால வினையாலணையும் பெயர்; இரண்டாம் வேற்றுமைத்தொகை. உரை செய்தவற்றைப் பட்டர் பிரான் சொன்ன இம்மாலையென்க. —— அடிவரவு – ஆநிரை கரு மச்சு தெரு புள் எருது குடம் சீமாலிகன் அண்டம் செண்பகம் இந்திரன். 10
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10
செண்பகம், Senbakam - செண்பகப் பூவும்
மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும்
செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும்
இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும்
எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற
பூவும், Poovum - மலர்களை யெல்லாம்
கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்;
இன்று, Indru - இப்போது
இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி
வா, va - வருவாயாக
என்று, Endru - என்று
பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் )
ஆய்ச்சி, Aaychi - யசோதை
மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு
உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை
எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
கோன், Kon - நிர்வாஹகரான
பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும்
பத்தே, Patthe - ஒருபத்தே!