| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 191 | பெரியாழ்வார் திருமொழி || 2-7 பூச்சூடல் 10 | செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம்மாலை பண்பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டார் பிரான் சொன்ன பத்தே 2-7-10 | செண்பகம், Senbakam - செண்பகப் பூவும் மல்லிகையோடு, Mallikaiyodu - மல்லிகைப் பூவும் செங்கழுநீர், Sengazhuneer - செங்கழுநீர்ப் பூவும் இருவாட்சி, Iruvaatchi - இருவாட்சிப் பூவும் எண் பகர், En pakar - (இன்ன தின்னதென்று) (ஆகிய) எண்ணிச் சொல்லப் படுகிற பூவும், Poovum - மலர்களை யெல்லாம் கொணர்ந்தேன், Konarendhen - கொண்டு வந்தேன்; இன்று, Indru - இப்போது இவை சூட்ட , Ivai sootta - இப் பூக்களைச் சூட்டும்படி வா, va - வருவாயாக என்று, Endru - என்று பகர் மண் கொண்டானை, Pakar man kondanai - பகர்ந்த மண்ணைக் கொண்டவனை (தன்னது என்று சாஸ்திரம் பகர்ந்த லோகத்தை அன்றோ இரந்து கொண்டான் ) ஆய்ச்சி, Aaychi - யசோதை மகிழ்ந்து, Magizhndhu - மகிழ்ச்சி கொண்டு உரை செய்த, Urai seytha - சொல்லியவற்றை எண் பகர் வில்லிபுத்தூர், En pakar villiputhoor - ராகமாகவே சொல்லுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன், Kon - நிர்வாஹகரான பட்டர் பிரான், Pattar piraan - பெரியாழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த இம்மாலை, Immaalai - இந்தச் சொல்மாலையும் பத்தே, Patthe - ஒருபத்தே! |