| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 192 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 1 | இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் மந்திர மா மலர் கொண்டு மறைந்துவராய் வந்து நின்றார் சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம்போது இதுவாகும் அழகனே காப்பிட வாராய் – 2-8 1- | சந்திரன், chandiran - சந்த்ரனானவன் மாளிகை சேரும், maaligai serum - வீடுகளின் மேல் நிலையிலே சேரப் பெற்ற சதுரர்கள் வெள்ளறை, sathurargal vellarai - மங்களா ஸாஸன ஸமர்த்தர்கள் வஸிக்கின்ற திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றவனே! அழகனே, azhagane - அழகு உடையவனே! இந்திரனோடு, indiranodu - இந்திரனும் பிரமன், piraman - ப்ரஹ்மாவும் ஈசன், eesan - ருத்ரனும் இமையவர், imaiyavar - மற்றுமுள்ள தேவர்களும் எல்லாம், ellam - (ஆகிய) யாவரும் மா மந்திரம் மலர் கொண்டு, maa manthiram malar kondru - சிறந்த மந்த்ர புஷ்பங்களைக் கொண்டு உவர் ஆய் வந்து, uvar aay vandhu - (மிக்க ஸமீபமாவும் மிக்க தூரமாகவு மல்லாமல்) நடுவிடத்தி லிருப்பவராக வந்து மறைந்து நின்றார், marainthu nindraar - மறைந்து நின்றார்கள் இது, idhu - இக் காலம் அம், am - அழகிய அந்தி போது ஆகும், andhi podhu aagum - ஸாயம் ஸந்த்யா காலமாகும் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆகையால்) (நான் உனக்கு ரக்ஷையாக) திருவந்திக் காப்பிடும்படி வருவாயாக |