திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1925 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1925பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ – பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ – கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ) 4
நாமம் பலவுமுடை நாரண நம்பீ தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4
பதவுரை Show / Hide
நாமம் பலவும் உடை, Naamam Palavum Udai - பல பல திருநாமங்களையுடைய (- (இது என் இது என் இது என்?))
நாரண நம்பி, Naarana Nambi - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே!
மிக நாறு, Miga Naaru - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற
துளபம் தாமம், Thulabam Thaamam - திருத்துழாய்மாலையை
இடுகின்றீர், Idhuginreer - அணிந்துகொண்டிருப்பவரே!
காமன் என, Kaaman Ena - மன்மதன்போல
பாடி வந்து, Paadi Vandu - பாடிக்கொண்டுவந்து
ஏமத்து, Emathu - இராப்பொழுதில்
இல்லம்புகுந்தீர், Illampugundheer - வீட்டினுள் புகுந்தீர்,