| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 193 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 2 | கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 | மதிள், madhil - மதிளரணை யுடைய திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றருளினவனே! மேல், mel - (என்) மேல் ஒன்றும், ondruum - துன்பமும் நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே! உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன் பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம் கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன; அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில் மன்றில், manril - நாற் சந்தியில் நில்வேல், nilvael - நில்லாதே; என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய் நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக |