| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 193 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - பசுக்களைக் கறக்க வேண்டிய நான் உன்னைக் காப்பிட அழைத்துக் கொண்டிருப்பதனால்! மேய வெளியே போயிருந்த பசுக்களெல்லாம் கன்றுகளுள்ள விடத்தில் வந்து சேர்ந்த பின்பும் கறப்பாரில்லாமல் முலைக்கடுப் பெடுத்துக் கத்துகின்றன என்பது முதலடியின் கருத்து. ‘கதறுகின்ற, என்பதை இடைநிலைத் தீபகமாக்கி, கன்றுகள் முலை யுண்ணப் பெறாமையால் கத்துகின்றன; பசுக்கள் புறம்பே நின்று கொண்டு கன்றுகள் முலை யூட்டுதல் கறத்தல் செய்யாமையாலே முலைக் கடுப்பாற் கதறுகின்றன என்றுமாம். ‘நேசமேல், என்றவிடத்தில், நேசம் ஏல் என்று பிரித்து ஏல் என்பதை அசைச் சொல்லாகவுங் கொள்வர். நேசம் – ‘ஸ்நேஹம், என்ற வடசொல் விகாரம். 2 | கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய் நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2 | மதிள், madhil - மதிளரணை யுடைய திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நின்றருளினவனே! மேல், mel - (என்) மேல் ஒன்றும், ondruum - துன்பமும் நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே! உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன் பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம் கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன; அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில் மன்றில், manril - நாற் சந்தியில் நில்வேல், nilvael - நில்லாதே; என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய் நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக |