Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 193 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
193பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப்போது மதிள் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய் -2 8-2
மதிள், madhil - மதிளரணை யுடைய
திரு வெள்ளறை, thiru vellarai - திரு வெள்ளறையிலே
நின்றாய், nindrai - நின்றருளினவனே!
மேல், mel - (என்) மேல்
ஒன்றும், ondruum - துன்பமும்
நேசம் இலாதாய், naesam ilaadhaay - அன்பில்லாதவனே!
உன்னை கூவி, unnai koovi - உன்னைக் கூவிக் கொண்டு
நின்றொழிந்தேன் (அதனால்), nindrozhinthen (adhanal) - நின்று விட்டேன்
பசு எல்லாம், pasu ellam - பசுக்களெல்லாம்
கன்றுகள் இல்லம் புகுந்து, kanrugall illam pugundhu - கன்றுகளிருக்குமிடத்திலே சேர்ந்து
கதறுகின்ற, kadharukindra - முலை கடுப்பாலே கத்துகின்றன;
அந்தி போது, andhi podhu - அந்தி வேளையில்
மன்றில், manril - நாற் சந்தியில்
நில்வேல், nilvael - நில்லாதே;
என் தன் சொல்லு, en than sollu - என்னுடைய வார்த்தை
நன்று கண்டாய், nanru kandaay - (உனக்கு) நல்லதாகுங்கிடாய்
நான் உன்னை காப்பு இட வாராய், naan unnai kaappu ida vaaraay - இப்போது இது சொல்வது சடக்கென (நீ) காப்பிட வருவதற்காக