திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1931 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10 | அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10 | பதவுரை Show / Hideஅல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து அங்கு, Angu - திருவாய்ப்பாடியில் ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட) தோள், Thol - திருத்தோள்களையுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல்மாலையை துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள் துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள். |