திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1932 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1932பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ – என்று கொண்டு இருக்கிறாயோ) 1
புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1
பதவுரை Show / Hide
எந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே!
எங்கள் கள அவிழ்கோதை காதலும், Engal Kala Avizhkothai Kaadhalum - தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும்
காரிகை மாதர் கருத்தும், Kaarikai Maathar Karuththum - (அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும்
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது, Pillai Than Kaiyil Kinname Okka Pesuvathu - சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது,
புள் உரு ஆகி, Pul Uru Aagi - (சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி
நள் இருள், Nal Irul - நடுநிசியிலே
வந்த, Vanda - (முலைகொடுத்துக் கொல்ல) வந்த
பூதனை, Poothanai - பூதனை
மாள, Maala - மாளும்படியாகவும்
இலங்கை, Ilankai - லங்காபுரியை
ஒள் எரி மண்டி உண்ண, Ol Eri Mandi Unna - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்
பணித்த, Paniththa - செய்தற்குறுப்பான
ஊக்கம் அதனை, Ookkam Adhanai - நிடுக்கை
நினைந்தோ, Ninaindho - திருவுள்ளம்பற்றியோ?