திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1932 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண் காண ஒண்ணாத ஆபத்தை பரிஹரித்த நமக்கு இது ஒன்றும் பழியாய்த் தலைக் கட்ட புகுகிறதோ – என்று கொண்டு இருக்கிறாயோ) 1 | புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ
கள்ளவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை தன கையில் கிண்ணமே யொக்கப் பேசுவது எந்தை பிரானே –10-9-1 | பதவுரை Show / Hideஎந்தை பிரானே, Endhai Pirane - எம்பெருமானே! எங்கள் கள அவிழ்கோதை காதலும், Engal Kala Avizhkothai Kaadhalum - தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும் காரிகை மாதர் கருத்தும், Kaarikai Maathar Karuththum - (அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும் பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது, Pillai Than Kaiyil Kinname Okka Pesuvathu - சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது, புள் உரு ஆகி, Pul Uru Aagi - (சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி நள் இருள், Nal Irul - நடுநிசியிலே வந்த, Vanda - (முலைகொடுத்துக் கொல்ல) வந்த பூதனை, Poothanai - பூதனை மாள, Maala - மாளும்படியாகவும் இலங்கை, Ilankai - லங்காபுரியை ஒள் எரி மண்டி உண்ண, Ol Eri Mandi Unna - ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும் பணித்த, Paniththa - செய்தற்குறுப்பான ஊக்கம் அதனை, Ookkam Adhanai - நிடுக்கை நினைந்தோ, Ninaindho - திருவுள்ளம்பற்றியோ? |