திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1934 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெறுதற்கு அரியல் ஆனவளை –இவளை இப்படிப் பண்ண வல்ல வடிவு அழகை உடையவனே – கையில் இருந்த கறுப்புக் கட்டி -தின்னவுமாய் பொகடவுமாய் இருக்கும் இறே அப்படியே நினைத்து இருக்கிறாயோ இவளையும்) 3 | ஆர்மலி யாழி சங்கோடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்து
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந்திறல் தானோ
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை-
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவள் எனக் கருதுகின்றாயே –10-9-3 | பதவுரை Show / Hideகார் முகில் வண்ணா, Kaar Mukil Vanna - காளமேகநிறத்தனே! (- (இப்படி நினைத்திருப்பதானது)) ஆர் எழில் வண்ணா, Aar Ezhil Vanna - மிக்க அழகுடையவடிவு படைத்தவனே!, நேர் இழை, Ner Izhai - நேர்மையான ஆபரணங்களை யுடையவளாய் நித்திலம் தொத்தை, Niththilam Thoththai - முத்துமாலை போன்றவளான நெடு கடல், Nedu Kadal - பெரிய கடலில் தோன்றிய அம்ருதம் போன்றவளான மாதை, Maathai - இப்பெண்பிள்ளை விஷயத்திலே இவள் அங்கையில் வட்டு ஆம் என கருதுகின்றாய், Ival Angaiyil Vattu Aam En Karudhingirai - ‘உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டிபோன்ற வளாமிவள்’ என்று நினைத்திருக்கிறாய், முன்னம், Munnam - முன்பு ஆர் மலி, Aar Mali - கூர்மை மிக்க ஆழி, Aazhi - திருவாழியையும் சங்கொடு, Sangodu - திருச்சங்கையும் பற்றி, Patri - கையிலேந்தி, (அவதரித்து) ஆற்றலை, Aattralai - மிடுக்கை ஆற்றல் மிகுத்து, Aatral Mikuthu - ஆறுதல் மிகும்படியாக்கி (யடக்கி) கஞ்சனை, Kanjanai - கம்ஸனை கடந்த, Kadandha - தொலைப்பதற் குறுப்பாயிருந்த நின் கடு திறல் தானோ, Nin Kadu Thiral Thaano - உன்னுடைய வலியதான பராக்ரமத்தை நினைத்தோ? |