திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1936 | பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மதுரா மதுராலாபா -என்னும்படியான பேச்சை உடையவளை – செவ்வி மாறாத மாலையையும் உடையவளை – இவள் வாசி ஒன்றையும் புத்தி பண்ணிற்று இல்லை –இதுக்கு நான் எத்தைச் செய்வேன் – பெரு வழிக் கரையிலே-நாவலில் விழுந்த பழமானது-குனிந்து எடுக்க்கவுமாய் தவிரவுமாய் இருக்கும் இறே அவ்வோபாதியும் நினைத்து இறுக்கிறலை யாயிற்று இவளையும்) 5 | செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டவர் செல்லும்
அரு வழி வான மதர் படக் கண்ட ஆண்மை கொலோ வறியேன் நான்
திரு மொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே –10-9-5 | பதவுரை Show / Hideஎங்கள், Engal - எங்களுடையவளாய் திருமொழி, Thirumozhi - சிறந்த (மதுரமான) பேச்சையுடையவளாய் தேன் மலர் கோதை, Then Malar Kothai - தேனொழுகும் மலர்களணிந்த மயிர் முடியையுடையளான இப்பெண்பிள்ளையினுடைய சீர்மையை, Seermaiyai - சிறப்பை நினைத்திலை, Ninaithilai - அறிகின்றிலை அந்தோ, Andho - ஐயோ! இவள் பெரு வழி நாவல் கனியினும் எளியள் என பேசுகின்றாய், Ival Peru Vazhi Naaval Kaniyinum Ezhiyal En Pesugindraai - பெரிய வழியில் விழுந்து கிடக்கிற நாவற் பழத்தைக்காட்டிலும் இவள் எளியவள் என்று நினைத்திருக்கிறாயே1, செரு, Seru - போர்க்களத்திலே அழியாத, Azhiyaadha - ஒருநாளும் தோற்றறியாத மன்னர்கள், Mannargal - அரசர்கள் மாள, Maala - மாண்டுபோகும்படியாக தேர் வலம் கொண்டு, Ther Valam Kondu - தேரின் வலிமையையே கொண்டு அவர் செல்லும், Avar Sellum - அவ்வரசர்கள் போகக்கூடிய அரு வழி வானம், Aru Vazhi Vaanam - அருமையான வழியையுடைய வீரஸ்வர்க்கத்தை அதர்பட கண்ட, Adharpada Kanda - பெருவழியாக்கின ஆண்மை கொலோ, Aanmmai Koloo - ஆண்பிள்ளைத்தனத்தை நினைத்தோ? நான் அறியேன், Naan Ariyeen - எனக்குத் தெரியவில்லை |