| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 194 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - சிறு பெண்கள் விளையாட்டாக மணற்சோறு சமைப்பதும் மணல் வீடு அமைப்பதுமாயிருக்க, அதை நீ அழித்து அப் பெண்களோடே வலிவிற் சண்டை யிட்டுக் கொண்டிருந்ததனால் ‘நீ இப்படித் திரியக்கூடாது, என்று நான் உனக்கு ஹிதமாக அதட்டினேன்; ஒருகால் நான் அடிப்பனோ வென்று அஞ்சி நீ ஓடிப் போய்ச் சோறுண்பதற்கும் வாராது நின்றிட்டாய்; இப்போது அப்படியொன்றுஞ் செய்யமாட்டேன்; காப்பிட நீ வரவேணுமென்கிறாள். ஆள்வாய்! – என் சொற்படி கேட்டு நான் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு என் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனே! என்றவாறு. முப்போது – இரண்டு ஸந்த்யையும் ஒரு உச்சிப்போதும். ‘‘வானவரேத்த,, என்பதும் பாடம். 3 | செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3 | ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே! முப்போதும், muppothum - மூன்று காலத்திலும் வானவர், vaanavar - தேவர்கள் ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ) செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள் சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும் (சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும் சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க) அப்போது, appodhu - அக் காலத்தில் நான், naan - நான் உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய் அடிசிலும், adisilum - சோற்றையும் உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய் இப்போது, ippodhu - இந்த மையத்திலே நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன் எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய் |