| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 194 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 3 | செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு அப்போது நான் உரப்பப் போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் 2-8 3 | ஆள்வாய், aalvai - என்னை ஆளப் பிறந்தவனே! முப்போதும், muppothum - மூன்று காலத்திலும் வானவர், vaanavar - தேவர்கள் ஏத்தும், eththum - ஸ்தோத்திரஞ்செய்கின்ற முனிவர்கள் வெள்ளறை, munivargal vellarai - (உன் மங்களத்தையே) எண்ணுகிறவர்களுடைய திரு வெள்ளறையிலே நின்றாய், nindrai - நிற்பவனே! (நீ) செப்போது, seppodhu - பொற் கலசங்களை (உவமையாகச்) சொல்லத் தகுந்த மெல் முலையார்கள், mel mulaiyaarkal - மெல்லிய முலையை யுடைய ஸ்திகள் சிறு சோறும், siru sorum - (விளையாட்டாகச் செய்த) மணற் சோற்றையும் (சிறு) இல்லும், (siru) illum - மணல் வீட்டையும் சிதைத்திட்டு, sidhaidittu - அழித்து விட்டு (நிற்க) அப்போது, appodhu - அக் காலத்தில் நான், naan - நான் உரப்ப, urappu - கோபித்துச் சொல்ல போய், poi - (பிடித்தடிப்பேனோ? என்றஞ்சி என் முன் நில்லாமல்) அப்பாற்போய் அடிசிலும், adisilum - சோற்றையும் உண்டிலை, undilai - உண்ணாமலிருந்திட்டாய் இப்போது, ippodhu - இந்த மையத்திலே நான் ஒன்றும் செய்யேன், naan ondruum seyyen - நான் உன்னை (மருட்டுதல் முதலியன) ஒன்றும் செய்ய மாட்டேன் எம்பிரான் காப்பிட வாராய், empiraan kaappida vaaraay - எம்பிரான் காப்பிட வாராய் |