திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1940 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1940பெரிய திருமொழி || (10-9–புள்ளுருவாகி) (பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு) - (தலைவியின் ஆற்றாமை கண்டு இரங்கிய தாய் தலைவனை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவளுடைய ஸ்லாக்யதையில் குறை யுண்டாய் இழக்கிறேன் அல்லேன்-இதுக்கடி நான் பண்ணின பாபம் இறே- அக்நி பரிசர்யை பண்ணவே காலம் போந்து இருக்கிற பிராமணன் தோட்டமாக நினைத்தாயே – வேறேயும் ஒரு கர்த்தவ்யம் உண்டாகா நினைத்து இரா நின்றாய்) 9
நீரழல் வானே நெடு நிலம் காலாய் நின்ற நின்நீர்மையை நினைந்தோ சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னதோர் தேற்றன்மை தானோ பார் கெழு பவ்வத் தாரமுதனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு ஆரேழல் ஓம்பும் அந்தணன் தோட்டமாக நின் மனத்து வைத்தாயே –10-9-9
பதவுரை Show / Hide
பாவம் செய்தேனுக்கு, Paavam Seithenukku - பாவியான என்னுடைய (- (இது))
பார் கெழு பௌவத்து ஆர் அமுது அனையபாவையை, Paar Kezhu Paavaththu Aar Amuthu Anaiyapavaiyai - பூமியைச் சூழ்ந்திருக்கிற கடலிலுண்டான அருமையான அம்ருதம்போன்ற கட்டழகியை
ஆர் அழல் ஒம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாய், Aar Azhai Ombum Andhanan Thottam Aaga Nin Manaththu Vaiththai - அக்நிஹோத்ரியான அந்தணனுடைய தோட்டமாகத் திருவுள்ளம் பற்றியிருக்கின்றாய்
நிலம்நீர் அழல்வான் நெடு நிலம்கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ, Nilamneer Azhalvan Nedu Nilamkal Aay Nindra Nin Neermayai Ninaindho - பஞ்சபூதங்களும் நாமேயாயிருக்கிறோ மென்கிற பெருமை நினைத்தோ?
சீர் கெழு கோதை, Seer Kezhu Kothai - சிறந்த மயிர்முடியை யுடையளான விஉள்
என் அலது இலள் என்ற, En Alathu Ilal Endra - என்னைத் தவிர்த்து வேறொரு கதியை யுடையவளல்லள் என்றுண்டான
அன்னது ஓர் தேற்றன்மை தானோ, Annadhu Oru Thetranmai Thaano - அப்படிப்பட்ட தைர்யத்தினாலோ?