திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1947 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தோழி என்று சமான துக்கையாய்-உடன் கூடினவளை சம்போதித்து- கோழி கூவென்னுமால் ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக் கோழி கூவென்னுமால் – என் செய்கேன் -என்கிறாள்) 6 | கோழி கூவென்னுமால்
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுதாயிற்றுக்
கோழி கூவென்னுமால் –10-10-6 | பதவுரை Show / Hideதோழி, Thozhi - வாராய் தோழீ (- (மறுபடியும்) (எம்பெருமான் பிரிந்துபோய்விடப் போகிறானே)) கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கத்துகிறது ஆழிவண்ணனா வரும் பொழுது ஆயிற்று, Azhivannana Varum Pozhuthu Aayitru - கடல் வண்ணனான எம்பெரு மான் இங்குவந்து சேருகிற வேளையாயிற்று ஆல், Aal - ஸந்தோஷம் கோழி கூ என்னும், Kozhi Koo Ennum - கோழியானது கூவென்று கூப்பிடப்போகிறதே! நான் என்செய் கேன், Naan Ensei Ken - நான் என்னபண்ணுவேன் ஆல், Aal - கஷ்டம்!. |