திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1949 | பெரிய திருமொழி || (10-10–திருத்தாய்) - (தலைமகனை பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்-வேல் போல் நெடிதாய் இருந்துள்ள கண்கள் களிப்ப – தேனார்ந்த சோலையை உடைத்தான ஸ்ரீ திருக் குடந்தையிலே சாய்ந்து அருளின வ்யாமுக்த்தன் – இங்கே போதுங்கொலோ) 8 | இங்கே போதுங்கொலோ
இனவேல் நெடுங்கண் களிப்பக்
கொங்கார் சோலைக் குடந்தை கிடந்த மால்
இங்கே போதுங்கொலோ –10-10-8 | பதவுரை Show / Hideகொங்கு ஆர், Kongu Ar - தேன்நிறைந்த (- (இங்கே போதும் சொலோ!-)) சோலை, Solai - சோலைகளையுடைய குடந்தை, Kudanthai - திருக்குடைந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருளாநின்ற மால், Maal - எம்பெருமான், இளம் வேல் நெடு கண் களிப்ப, Ilam Vel Nedu Kann Kalippa - ஓன்றுக்கொன்று ஒப்பாய்வேல் போன்ற நீண்ட (எனது) கண்களானவை கண்டு களிக்கும்படியாக இங்கே, Inge - இவ்விடத்தே போதும்கொலோ, Podhumkolo - எழுந்தருளக் கூடுமோ? |