| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 195 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘நாங்கள் கண்ணை விழித்து விளையாட வொண்ணாதபடி இந்த கிருஷ்ணன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவியும், நீ ஏன் எங்கள் கண்ணிலே மண்ணைத் தூவினாயென்று நாங்கள் கேட்கக் காலினாலுதைத்தும் போனான், என்றிப்படி இவ்வூரிலுள்ள பிள்ளைகள் ஒருவரிருவர் அல்லாமல் மிகப்பலர் வந்து என்னிடத்தில் முறையிட்டுக் கொள்ளுகிறார்கள்; ஆதலால் நீ அங்கு போகாமல் நான் காப்பிடும்படி வரவேணுமென்கிறாள். கண்டாரோடே தீமை செய்வாய் = உன்னிடம் அன்புள்ளவர்களாய் நீ செய்தவற்றைப் பொறுக்குமவர்களிடத்தில் மாத்திரமல்லாமல் யாவரிடத்துமட் தீமை செய்கிறாயே! என்றவாறு. ‘‘தீமை செய்வாய்! வண்ணம் வேலையதொப்பாய்,, என்றது – நீ தீம்பு செய்தாலும் உன்னை விடமுடியாதபடி யிருக்கிறது உனது வடிவழகு என்றபடி. வேலையது = அது – முதல் வேற்றுமைச் சொல்லுருபு. 4 | கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4 | கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன் கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம் தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே! வண்ணம், vannam - திருமேனி நிறம் வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே! வள்ளலே, vallale - உதாரனே! எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல) பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள் வந்திட்டு, vandhittu - வந்திருந்து மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்; என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து) முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய் |