| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 195 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 4 | கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4 | கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே! வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன் கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம் தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே! வண்ணம், vannam - திருமேனி நிறம் வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே! வள்ளலே, vallale - உதாரனே! எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல) பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள் வந்திட்டு, vandhittu - வந்திருந்து மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்; என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து) முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள் காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய் |