Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 195 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
195பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 4
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்று என்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் 2-8 4
கண்ணனே, kannane - ஸ்ரீக்ருஷ்ணனே!
வெள்ளறை நின்றாய்!, vellarai nindrai! - புண்டரீகாக்ஷன் தானே இவன்
கண்டாரோடே, kandaarode - கண்டவரோடெல்லாம்
தீமை செய்வாய், theemai seivaay - தீம்பு செய்பவனே!
வண்ணம், vannam - திருமேனி நிறம்
வேலை அது, velai adhu - கடலின் நிறத்தை
ஒப்பாய், oppaay - ஒத்திருக்கப் பெற்றவனே!
வள்ளலே, vallale - உதாரனே!
எண் அரு, en aru - எண்ணுவதற்கு அருமையான (மிகப் பல)
பிள்ளைகள் இவர், pillaigal ivar - இப் பிள்ளைகள்
வந்திட்டு, vandhittu - வந்திருந்து
மணல் கொடு, manal kodu - மணலைக் கொண்டு வந்து
கண்ணில் தூவி, kannil thoovi - கண்ணில் தூவி விட்டு
காலினால் பாய்ந்தனை, kaalinaal paaindhanai - (அதனோடு நில்லாமல்) காலினாலும் உதைத்தாய்;
என்று என்று, endru endru - என்று பலதரஞ்சொல்லி (நீ செய்யுந்தீம்பைக் குறித்து)
முறைப்படுகின்றார், muraippaduginraar - முறையிடா நின்றார்கள்
காப்பு இட வாராய், kaappu ida vaaraay - (ஆதலால் அங்கே போவதை விட்டு) காப்பு இட வாராய்