திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1959 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேசிகனான ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நின்று வழி இட்டுக் கொடுக்கையாலே ராஷசர்கள் வெல்ல மாட்டிற்று இலர்கள் இறே – அப்படியே நிலவரே வழி காட்டி கொடு வந்து நலியா நிற்க நம்மால் பரிஹரிக்கப் போமோ) 8 | மாலினம் துழாய் வரும் என்நெஞ்சகம்
மாலினந்துழாய் வந்து என்னுள் புகக்
கோல வாடையும் கொண்டு வந்ததோர்
ஆலி வந்தது ஆல் அரிது காவலே –11-1-8 | பதவுரை Show / Hideஎன் நெஞசகம், En Nenjasagam - எனது நெஞ்சானது மால்இனம், Maalinam - (அப்பெருமான் பக்கலுண்டான) வியாமோஹத்திற்குத் தகுதியாக துழாய் வரும், Thuzhai Varum - அலைந்துகொண்டு வாரா நின்றது மாலின், Maalin - (அந்த) எம்பெருமானுடைய அம் துழாய், Am Thuzhai - அழகிய திருத்துழாய் மாலையானது என்னுள் வந்து புகளுதல், Ennul Vandu Pugaluthal - என்னுடைய நினைவுக்குவர வந்தது ஓர் ஆலி, Vandhadhu Oru Aali - (ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது கோலம், Kolam - அழகிய வாடையும், Vaadaiyum - வாடைக்காற்றையும் கொண்டு வந்தது, Kondhu Vandhadhu - துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது. ஆல், Aal - அந்தோ! (இனி) காவல், Kaaval - (உயிரைக்) காப்பாற்றிக் கொள் அரிது, Aridhu - முடியாதகாரியம் |