| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 196 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 5 | பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய் நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞானச் சுடரே உன் மேனி சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய் -2 8-5 | இ ஊரில், i ooril - (பஞ்சலக்ஷம் குடியுள்ள) இவ்வூரிலே தீமைகள் செய்வார், theemaigal seivaar - தீம்புகளைச் செய்பவர்களாகிய பிள்ளைகள், pillaigal - சிறுவர்கள் பல் ஆயிரவர், pal aayiravar - அனேக ஆயிரக் கணக்கானவர்கள்; எல்லாம், ellam - அவர்கள் செய்யும் தீம்புகளெல்லாம் உன் மேல் அன்றி , un mel andri - உன் மேலல்லாமல் போகாது, pogaadhu - (வேறொருவர் மேலும்) ஏறாது; எம்பிரான்! நீ இங்கே வாராய், empiraan! nee inge vaaraay - (இப்படியிருப்பதால் அங்கே போகாமல்) எம்பிரான்! நீ இங்கே வாராய்; நல்லார்கள் வெள்ளறை நின்றாய், nallaargal vellarai nindraay - நல்லவர்கள் வாழ்கிற வெள்ளறை(யில்) நின்றாய்! ஞானம் சுடரே, gyaanam sudare - ஞான வொளியை யுடையவனே! உன் மேனி, un meni - உன் திருமேனியை சொல் ஆர் நின்று ஏத்தி, sol ar nindru aethi - சொல் நிறையும்படி நின்று ஸ்தோத்ரஞ்செய்து வாழ்த்தி சொப்பட காப்பு இட வாராய், vaazhthi soppada kaappu ida vaaraay - மங்களாசாஸநஞ்செய்து நன்றாக காப்பு இட வாராய் |