திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1961 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1961பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பொருகால்
பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக
ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய்
சென்று, Sendru - எழுந்தருளின
மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும்
செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக
மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த
மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும்
வாள், Vaal - வாட்படை கொண்டவருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த)
சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு
அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது.