திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1961 | பெரிய திருமொழி || (11-1–குன்றமொன்) - (பிரிவு ஆற்றாத தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லார்களுக்கு பாதக பதார்த்தங்களால் நோவு பட வேண்டாதே நித்ய சம்ஸ்லேஷத்தோடே காலம் செல்லப் பெறுவர்–அல்லல் ஆகிறது இத் திரு மொழியில் பட்ட கிலேசம்) 10 | அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனைச் செங்கண் மாலினை
மன்றிலார் புகழ் மங்கை வாள் கலி
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10 | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பொருகால் பாரதத்து, Bharathaththu - பாரத யுத்தத்திற்குப் பூர்வாங்கமாக ஐவர் தூதன் ஆய், Aivar Thoodhan Aay - பஞ்சபாண்டவர்கட்குத் தூதுவனாய் சென்று, Sendru - எழுந்தருளின மாயனை, Maayanai - ஆச்சரிய சக்தியுத்தனும் செம் கண் மாலினை, Sem Kan Malinai - செந்தமாரைக் கண்ணனுமான ஸர்வேச்வரன் விஷயகமாக மன்றில் ஆர் புகழ், Manril Aar Pugazh - நூறத்திகள் தோறும் நிறைந்த மங்கை, Mangai - திருமங்கை நாட்டையுடையவரும் வாள், Vaal - வாட்படை கொண்டவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார்(அருளிச்செய்த) சொல், Sol - இந்த ஸ்ரீ ஸூக்திகளை வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவாக்ளுக்கு அல்லல் இல்லை, Allal Illai - ஒரு துன்பமும் உண்டாக மாட்டாது. |