திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1962 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1962பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தால் சொல்லிற்று ஆயிற்று என் என் அவனை என் முலையோடு கொடு வந்து சேர்க்க வல்லார் இல்லையோ -என்கிறாள்) 1
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையரோடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்தீர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவர் ஆர் கொலோ –11-2-1
பதவுரை Show / Hide
குன்றம், Kundram - கோவர்த்தனமலையை
எடுத்து, Eduthu - குடையாக வெடுத்துப்பிடித்து
மழை தடுத்து, Mazhai Thaduthu - மழையைத்தடை செய்தவனாயும்
இளையாரொடும், Ilaiyarodum - இளம் பெண்களோடே
மன்றில், Manril - நாற்சந்தியிலே
குரவை பிணைந்த, Kuravai Pinaintha - கைகோத்துக் குரவைக் கூத்தாடினவனாயுமுள்ள
மால், Maal - கண்ணபிரான்
என்னை மால் செய்தான், Ennai Maal Seithaan - என்னை மதிமயங்கப் பண்ணிவிட்டான்
முன்றில், Munril - வாசலிலே
தனி நின்ற, Thani Nindra - தனியேநின்ற
பெண்ணைமேல், Pennai Mel - பனைமரத்தின் மீது
கிடந்து, Kidandhu - இருந்துகொண்டு
ஈர்கின்ற, Eerkingira - ஹிம்ஸிக்கின்ற
அன்றிலை, Anrilai - அன்றிற்பறவையை
கூட்டின், Koottin - கூட்டில் நின்றும்
பிரிக்ககிற்பவர்            ஆர்கொலோ, Pirikkakirbavar Arkoloo - பிரித்துவிடவல்லவர் யாரோ? (அறியேன்)