திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1963 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1963பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இந்த இடையனானவன் வாயிலே வைத்து-ஸ்த்தானே சத்தான நின்று ஏங்கி ஊதுகிற குழலானது என்னோடே பாலிசமான வியாபாரங்களை பண்ணா நின்றது) 2
பூங்குருந்து ஒசித்தானை காய்ந்தரிமா செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி யுண்ட வவ்வாயன் நிற்க விவ்வாயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளைமையே –11-2-2
பதவுரை Show / Hide
பூ குருந்து ஓசித்து, Poo Kurunthu Osiththu - பூத்திருந்த குருந்தமரத்தை முறித்தொழித்தவனாயும்
ஆனை காய்ந்து, Aanaik Kaayndhu - ரிஷபங்களைச் சீறிமுடித்தவனாயும்
அரி மா, Ari Maa - (கேசியென்ற) சத்துருவான குதிரையை
செகுத்து, Sekuthu - கொன்றவனாயும்
ஆங்கு, Aangu - கம்ஸனது அரண்மனை வாசலிலே
வேழத்தின், Vezhaththin - குவலயாபீடமென்கிற யானையினுடைய
கொம்பு கொண்டு, Kombu Kondo - தந்தத்தைப் பறித்தெறிந்தவனாயும்
வன்பேய், Vanpei - (பூதனையென்னும்) வலிய பேய்ச்சியினுடைய
முலை, Mulai - (நஞ்சு தீற்றிய) முலையை
வாங்கி, Vaangi - கையிற்பிடித்து
உண்ட அவ் வாயன், Unda Av Vayan - உறிஞசியுண்ட அப்படிப்பட்ட திருப்பவளத்தை யுடையவனாயுமிருக்கிற கண்ணபிரான்
நிற்க, Nirka - உதாஸீநனாயிருக்க
ஆயன், Aayan - அந்த கோபாலகிருஷ்ணனுடைய
வாய், Vaai - வாயிலே
ஏங்கு, Aengu - ஒலிக்கின்ற
இ வேய் குழல், I Vei Kuzhal - இந்த வேய்ங்குழலானது
என்னோடு, Ennodu - என்திறத்திலே
இளைமை ஆடும், Ilaiyai Aadum - சில சிறுச்சேவகங்கள் செய்யாநின்றது!