திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1965 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1965பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவருடைய ஐஸ்வர்ய பிரகாசமான திருவடிகளை அனுசந்திக்கும் போது எல்லாம் – கறுத்த தன்மையை உடைத்தாய் இருக்கிற கடல் ராத்ரியிலே என் எளிமை கண்டு மிகைத்து கூப்பிடா நிற்கும் – அதுக்கு மேலே –நான் வருந்தும் படியாக பலவானாய் இருக்கிற வாடையானது வாரா நின்றது – ஓர் அபலை இதுக்கு கடகிடவோ) 4
பொருந்து மா மரம் ஏழு எய்த புனிதனார் திருந்து சேவடி என் மனத்து நினைதொறும் கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அதுவன்றி வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் –11-2-4
பதவுரை Show / Hide
பொருந்து, Porundhu - தம்மில்தாம் பொருந்திநின்ற
மாமரம் ஏழும் எய்த, Mamaram Ezham Eytha - பெரிய ஸாலவ்ருக்ஷங்களேழையும் அம்புசெலுத்தித் துளைபடுத்தின
புனிதனார், Punithanar - பரமபாரிசுத்தரான பெருமாளுடைய
திரு உந்து, Thiru Unthu - ஐச்வர்ய ப்ரகாசமான
சே அடி, Sae Adi - திருவடிகளை
என் மனத்து, En Manathu - என் நெஞ்சிலே
நினை தொறும், Ninai Thorum - அநுஸந்திக்கும் போதெல்லாம்
கரு தண்மா கடல், Karuthu Thanma Kadhal - கறுத்துக் குளிர்ந்து பெரிதான கடலானது
கங்குல், Kangul - இரவுமுற்றும்
ஆர்க்கும், Aarkkum - ஆரவாரிக்கும்
அது அன்றியும், Athu Anriyum - அதுவுந் தவிர
வாடை, Vadai - வாடைக் காற்றும்
வருந்த, Varuntha - நான் பரிதபிக்கும்படியாக
வரும், Varum - வந்து வீசுகின்றது
இதற்கு, Idharku - இதற்குப் பாரிஹாரமாக
இனி என் செய்கேன், Ini En Seyken - இனி என்ன பண்ண வல்லேன்