திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1966 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்கு வல்லபரான அவர் இடையாட்டாத்தோமான பின்பு இறே இவை நமக்கு இப்படியாகப் புகுந்தது – அவருடைய பிரணயித்வம் கண்டு நாம் அகப்பட்ட பின்பு இறே- இவை நமக்குப் பாதகமாகப் புக்கது – பூர்வ அபராதங்களுக்கு சேர்த்தி போராதாகிலும் ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பின்னை மணாளன் திறத்தோம் ஆன பின்பு அன்றோ-இவை இப்படி யாயிற்று – சாமான்யன் என்று ஈடும் ஈடெல்லாம் இட அமையும் என்பாரைப் போலே அவளோடு ஒரு சம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தால் என்-என்பாராம்) 5 | அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும்
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்
பொன்னம் கலை அல்குல் அன்னம் மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த மாயின பின்னையே –11-2-5 | பதவுரை Show / Hideஅன்னை முனிவதும், Annai Munivadhum - பெற்றதாய் சீறிச் சொல்லுவதும் (- (அதற்கு முன்பு இல்லை)) அன்றிலின் குரல் ஈர்வதும், Anrilin Kural Eirvadhum - அன்றிற்பறவையின்குரல் ஹிம்ஸிப்பதும் மன்னு மறிகடல் ஆர்ப்பதும், Mannu Marikadal Aarpadhum - எப்போதும் அலைமடியப் பெற்ற கடல் கோஷிப்பதும் வளை சோர்வதும், Valai Soorvadhum - கைவளைக்ள கழல்வதும் (ஆகிய இவையெல்லாம்) அம், Am - அழகிய பொன் கலை, Pon Kalai - பொன்னாடையணிந்த அல்குல், Alkul - நிதம்பத்தையுடையவளும் அன்னம் மென் நடை, Annam Men Nadai - அன்னத்தின்நடை போன்று அழகிய நடையையுடையவளும் பூ குழல், Poo Kuzhal - பூவணிந்த கூந்தலை யுடையவளுமான பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியின் மணாளர், Manalar - நாயகரான கண்ணபிரானுடைய திறத்தம் ஆயின பின்னையே, Thiraththam Aayin Pinnaiye - விஷயத்தில் ஈடுபட்டோ மானபிறகே |