திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1967 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1967பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கோழியும் கூகின்றது இல்லை –விடிவுக்கு பிராப்தமான இதுவும் கூட அரிதாக நின்றது – கூர் இருள் ஆயிற்றே –விடிந்த பின்பும் இருள் கால் வாங்குகிறது இல்லை) 6
ஆழியும் சங்கும் உடைய நாங்கள் அடிகள் தாம் பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார் தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே –11-2-6
பதவுரை Show / Hide
ஆழியும் சுங்கும் உடைய, Azhiyum Sungum Udaiya - திருவாழி திருச்சங்குகளை யுடையரான
நங்கள் அடிகள் தாம், Nangal Adigal Thaam - அஸ்மத்ஸ்வாமியான ஸர்வேச்வரன்
நம்மை, Nammai - நம்மை
பாழிமையான கனவின், Pazhimaiyana Kanavin - மிகப்பெரிதாய் ஸ்வப்நதுல்யமான ஸம்ச்லேஷத்தினால்
பகர்வித்தர், Pakarviththar - இப்படி கூப்பிடும்படியாகச் செய்துவிட்டார்
தோழியும் நானும் ஒழிய, Thozhiyum Naanum Ozhiy - தோழியும் நானும் தவிர
வையம், Vaiyam - மற்ற உலகத்தாரெல்லாரும்
துயின்றது, Thuyinrathu - உறங்கிவிட்டார்க்ள்
கோழியும், Kozhiyum - கோழிகூட
கூகின்றது இல்லை, Kookindrathu Illai - (விடிவுக்கு அறிகுறியாகக்) கூவுகினறதில்லை
கூர்இருள் ஆயிற்றே இன்னமும், Koorairul Aayitree Innamum - நள்ளிருளா யிருக்கின்றதே!