திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1968 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1968பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அந்த காமன் -எனக்கு நன் மகன் –சாமங்கள் தோறும் காமாக்னியை தூவா நின்றான் – தனக்கு நான் அனுவர்த்த நீயையான ஆகாரம் கிடக்கச் செய்தே என்னுடைய இம்முலைகள் தாம் அவனுக்கு என்றே யாயிற்று வளருகிறது) 7
காமன் தனக்கு முறை யல்லேன் கடல் வண்ணனார் மா மணவாளர் எனக்குத் தான் மகன் சொல்லில் யாமங்கள் தோறும் எரி வீசும் என்னிளம் கொங்கைகள் மா மணி வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே –11-2-7
பதவுரை Show / Hide
காமன் தனக்கு முறை அல்லேன், Kaaman Thanakku Murai Allae - மன்மதனால் நான் நலியப்பெறுதற்கு முறையுடையே னல்லேன்
சொல்லில், Sollil - ஏனென்னில்
கடல் வண்ணனார், Kadal Vannanaar - கடல்வண்ணரான கண்ணபிரான்
எனக்கு மா மணவாளர், Enakku Maa Manavaalar - எனக்குச்சிறந்த நாயகராயிருக்கின்றார் (இவ்வழியாலே)
தான், Thaan - அந்த மன்மதன் தான்
எனக்கு மகன், Enakku Magan - எனக்கு மகனாகப் பெற்றான் (அப்படியிருந்தும்)
யாமங்கள் தோறு, Yaamangal Thoru - எப்போதும்
எரி வீசும், Eri Veesum - நெருப்பைத் தூவுகின்றாள்
என் இள கொங்கைகள், En Ilai Kongkaigal - எனது இளமுலைகளோ வென்னில்
மா மணி வண்ணர் திறத்த ஆய்வளர்கின்ற, Maa Mani Vannaar Thiratha Aayvalarkindra - நீலமணிவண்ணரான அப்பெருமாளை நோக்கியே வளர்கின்றனவாயுள்ளன