| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 197 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - கம்ஸன் ஆகாச வாணி சொன்னதைக் கேட்டது முதல் தேவகியின் கருப்பம் பிறந்ததும் அப்போதைக்கப் போது அழித்து வருகையில் உனது யோக நித்திரையாற் பிறந்த கன்னிகையைக் கொல்ல முயன்ற போது அக் கன்னிகை ‘உன்னைக் கொல்லப் போகிறவன் ஒளித்து வளர்கின்றான், என்று சொல்லியதைக் கேட்டது முதல் உன் மேல் கோபங்கொண்டவனாய் உன்னை வஞ்சனையாலழிப்பதற்குத் தாய் வடிவத்தோடு போகும்படி பேய் மகளாகிய பூதனையை ஏவினானென்று லோக ப்ரவாதமிருக்கிறது; ஆகையால், அவன் உன்னைக்கொல்ல இன்னும் யாரையேனும் ஏவக் கூடும்; எனக்கு அச்சமாயிருக்கிறது; ஆகவே, நீ அவ்விடத்து நின்றும் நான் அந்திக் காப்பிட இங்கு வரவேணுமென்பதாம். 6 | கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 | மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும் மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்! கஞ்சன், kanjan - கம்ஸனானவன் நின் மேல், nin mel - உன் மேலே கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு கரு நிறம், karu niram - கரு நிறத்தையும் செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய பேயை, peyai - பூதனையை வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு விடுத்தான், Vidutthaan - அனுப்பினான் என்பது, Enbadhu - என்பதான ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும் உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன் அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய் |