Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 197 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
197பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 6
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6
மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற
மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும்
மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்!
கஞ்சன், kanjan - கம்ஸனானவன்
நின் மேல், nin mel - உன் மேலே
கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு
கரு நிறம், karu niram - கரு நிறத்தையும்
செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய
பேயை, peyai - பூதனையை
வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு
விடுத்தான், Vidutthaan - அனுப்பினான்
என்பது, Enbadhu - என்பதான
ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும்
உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு
நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு
அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன்
அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய்