| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 197 | பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 6 | கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு மஞ்சு தவழ மணி மாட மதிள் திரு வெள்ளறையில் நின்றாய் அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் -2- 8-6 | மஞ்சு தவழ், manju thavazh - மேகங்கள் ஊர்ந்து செல்கின்ற மணி மாடம், mani maadam - ரத்ந மயமான வீடுகளையும் மதிள் திருவெள்ளறை, madhil thiru vellarai - மதிளையுமுடைய திருவெள்ளறை(யில்) நின்றாய்! கஞ்சன், kanjan - கம்ஸனானவன் நின் மேல், nin mel - உன் மேலே கறுக்கொண்டு, karukkondu - கோபங்கொண்டு கரு நிறம், karu niram - கரு நிறத்தையும் செம் மயிர், sem mayir - செம் பட்ட மயிரையுமுடைய பேயை, peyai - பூதனையை வஞ்சிப்பதற்கு, vanjippatharku - (உன்னை) வஞ்சனையாகக் கொல்வதற்கு விடுத்தான், Vidutthaan - அனுப்பினான் என்பது, Enbadhu - என்பதான ஓர் வார்த்தையும் , Or vaarthaiyum - ஒரு சொல்லும் உண்டு, undu - கேட்டிருப்பதுண்டு நீ அங்கு நிற்க, Nee Angu Nirka - (ஆதலால்) நீ அவ்விடத்திலே நிற்பதற்கு அஞ்சுவன், Anjuvan - நான் அஞ்சா நின்றேன் அழகனே! காப்பு இட வாராய், Azhagane! Kaappu Ida Vaaraay - அழகனே! காப்பு இட வாராய் |