திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1970 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது – இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள்) 9 | காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு
பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய்
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால்
கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9 | பதவுரை Show / Hideதோழி, Thozhi - வாராய்தோழீ காமன்கணைக்கு, Kaamankanaikku - மன்மதபாணங்களுக்கு ஓர்இலக்கம் ஆய், Oorilakkam Aay - இலக்காகி யிருப்பதனாலே நலத்தின் மிகு, Nalaththin Migu - நன்மைமிக்கதாய் பூமரு, Poomaru - விரும்பத்தக்கதாய் கோலம், Kolam - அழகியதான நம் பெண்மை, Nam Penmai - நமது பெண்மைக்குணத்தை சிந்தித்து, Sindhithu - நினைத்துக்கொண்டு இராது, Irathu - இவ்விடத்திலேயே இருந்திடாமல் போய், Poi - புறப்பட்டுப்போய் கார்முகில் வண்ணரை, Kaarmugil Vannarai - காளமேகச்யாமரான பெருமாளை தூ மலர் நீர் கொடு, Thoo Malai Neer Kodu - பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாம் தொழுது ஏத்தினால், Naam Thozhudhu Aethinaal - நாம் வணங்கித் துதித்தால் கண்களால் காணல் ஆம் கொலோ, Kangkalal Kaanal Aam Kolo - (அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ? |