திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1970 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1970பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் முறை தப்பி நின்றான் – அவன் பரிகரமும் முறை தப்பி நின்றது – இனி நாமும் முறை தப்பி நின்றாகிலும் ஜீவிக்கும் அத்தனை – என்கிறாள்) 9
காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு பூமரு கோல நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் கார் முகில் வண்ணரைக் கண்களால் காணலாம் கொலோ –11-2-9
பதவுரை Show / Hide
தோழி, Thozhi - வாராய்தோழீ
காமன்கணைக்கு, Kaamankanaikku - மன்மதபாணங்களுக்கு
ஓர்இலக்கம் ஆய், Oorilakkam Aay - இலக்காகி யிருப்பதனாலே
நலத்தின் மிகு, Nalaththin Migu - நன்மைமிக்கதாய்
பூமரு, Poomaru - விரும்பத்தக்கதாய்
கோலம், Kolam - அழகியதான
நம் பெண்மை, Nam Penmai - நமது பெண்மைக்குணத்தை
சிந்தித்து, Sindhithu - நினைத்துக்கொண்டு
இராது, Irathu - இவ்விடத்திலேயே இருந்திடாமல்
போய், Poi - புறப்பட்டுப்போய்
கார்முகில் வண்ணரை, Kaarmugil Vannarai - காளமேகச்யாமரான பெருமாளை
தூ மலர் நீர் கொடு, Thoo Malai Neer Kodu - பரிசுத்தமான புஷ்பங்களையும் தீர்த்தங்களையும் கொண்டு
நாம் தொழுது ஏத்தினால், Naam Thozhudhu Aethinaal - நாம் வணங்கித் துதித்தால்
கண்களால் காணல் ஆம் கொலோ, Kangkalal Kaanal Aam Kolo - (அவரை) கண்ணாலே ஸேவிக்கப் பெறலாமோ?