திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1971 | பெரிய திருமொழி || (11-2–குன்றமெடுத்து) - (தலைவி பிரிவு ஆற்றாத வருந்திக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்தி பிரதிபந்தகமான கர்மங்கள் சில நாள் போய் சில நாள் நிற்கை அன்றிக்கே ஒரு நாளும் ஒன்றும் நில்லாது –இவ்வளவு அன்றிக்கே மேல் பெறப் புகுகிற பேற்றின் கனத்தைச் சொல்லப் புகில் – வருந்தி பனை நிழல் போலே தங்கள் அளவிலே போகை அன்றிக்கே இவர்கள் இருந்த தேசத்திலும் கூட இன்றிக்கே ஒழியும் – பாதக பதார்த்தங்களின் கையிலே நோவு படாதே அவை தானே அனுகூலமாம் படி அவனோடு நித்ய சம்ச்லேஷம் பண்ணப் பெறுவர்) 10 | வென்று விடை யுடன் ஏழு அடர்த்த வடிகளை
மன்றின் மலி புகழ் மங்கை மன் கலி கன்றி சொல்
ஓன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை யொன்றும் சொல்லில் உலகிலே –11-2-10 | பதவுரை Show / Hideவென்றி, Vendri - வெற்றியைத் தொழிலாகவுடைய (- (வினை ஒன்றும் நில்லா)) விடை ஏழ், Vidai Ezh - ஏழு ரிஷபங்களை உடன், Udan - உடனே அடர்த்த, Adarttha - திரஸ்காரித்த அடிகளை, Adigalai - எம்பெருமான் விஷயமாக மன்றில் மலி புகழ், Manril Mali Pugazh - நாற்சந்திகளிலே நிறைந்த புகழையுடையரும் மங்கை மன், Mangai Man - திருமங்கை நாட்டுக்குத் தலைவருமான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் சொல், Sol - அருளிச்செய்த ஒன்று நின்ற ஒன்பது, Onru Nindra Onbathu - ஒன்றோடே கூடி நின்ற ஒன்பது பாட்டாகிய இத்திருமொழியை உரைப்பவர் தங்கள்மேல், Uraippavar Thangalmel - அநுஸந்திப்பவாக்ளிடத்திலே வினை ஒன்றும், Vinai Onrum - ஒருவகையான கருமமும் என்றும், Endrum - ஒருநாளும் நில்லா, Nilla - நிற்கமாட்டாது சொல்லில், Sollil - இன்னமும்பலனை விவாரித்து சொல்லப்புக்கால் உலகிலே, Ulagile - அவாக்ளிருந்ததேசத்திலுங்கூட |