திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1972 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் – தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள்) 1 | மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப்
பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ்
தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர்
என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1 | பதவுரை Show / Hideமன் இலங்கு, Man Ilangu - (பல) அரசாகள் விளங்கா நின்ற பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே தேர் ஊர்ந்து, Ther Oorndhu - (சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும் மாவலியை, Mavalaiya - மஹாபலியை பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து, Pon Ilangu Thin Vilangkil Vaiththu - பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும் பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட தென்இலங்கை, Thenilankai - தென்னிலங்கையினுடைய ஈடு, Eedu - மதிப்பை அழித்த, Azhiththa - அழித்தவனாயுமிருக்கிற தேவற்கு, Thevarku - எம்பெருமானுக்கு என் இலங்கு சங்கோடு, En Ilangu Sangodu - எனது ஒளிமிக்கவைகளைகளையும் எழில், Ezil - அழகையும் தோற்றிருந்தேன், Thotrirundhen - இழந்திரா நின்றேன் இது காணீர், Idhu Kanneer - இவ்விருப்பைக் காணுங்கோள் |