திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1972 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1972பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் வந்தேறியாயும் ஸ்வா பாவிகமாயும் உண்டான என்னுடைய ஆபரணங்களை இழந்து இருக்கிற இப்போது கிடிகோள்- அவர் ஆஸ்ரித அர்த்தமாக தம்மைத் தாழ விட்டு சாரத்தியம் பண்ணியும் -இரப்பாளனாகவும் – தம்மைப் பேணாதே அம்பு ஏற்றும் பண்ணும் வியாபாரங்கள் அடைய நமக்குப் பலித்த படி இது கிடிகோள்) 1
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மா வலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்துப் பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கிது காணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1
பதவுரை Show / Hide
மன் இலங்கு, Man Ilangu - (பல) அரசாகள் விளங்கா நின்ற
பாரதத்து, Bharathaththu - பாரதயுத்தத்திலே
தேர் ஊர்ந்து, Ther Oorndhu - (சாரதியாய் நின்று) தேரை நடத்தினவனாயும்
மாவலியை, Mavalaiya - மஹாபலியை
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து, Pon Ilangu Thin Vilangkil Vaiththu - பொன்மயமாக விளங்குகின்ற திடமான விலங்கிலே பிணைத்தவனாயும்
பொரு கடல் சூழ், Poru Kadal Soozh - அலையெறிகின்ற கடலால் சூழப்பட்ட
தென்இலங்கை, Thenilankai - தென்னிலங்கையினுடைய
ஈடு, Eedu - மதிப்பை
அழித்த, Azhiththa - அழித்தவனாயுமிருக்கிற
தேவற்கு, Thevarku - எம்பெருமானுக்கு
என் இலங்கு சங்கோடு, En Ilangu Sangodu - எனது ஒளிமிக்கவைகளைகளையும்
எழில், Ezil - அழகையும்
தோற்றிருந்தேன், Thotrirundhen - இழந்திரா நின்றேன்
இது காணீர், Idhu Kanneer - இவ்விருப்பைக் காணுங்கோள்