திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1977 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1977பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே பிரதம ஸூஹ்ருதமாய் நின்று வ்யாபரிக்கை யாலே பூமி அந்தரிஷாதிகளை அளந்து கொள்ளுகிற இடத்தில்-ஆகாசமானது எட்டுத் தொட்டாய் போந்தது பூமியானது திருவடிகளுக்கு போராது ஒழிவதே -யென்று இதிலே வித்தராய் – ப்ரஹ்மாதிகள் எழுதிக் கொடுத்து – கைத்தாமரை குவிக்கும் –ஸூக பிரதனான என்னுடைய ஸ்ரீ கிருஷ்ணனை வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உற்றார்) 6
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார் ஒளி விசும்பில் ஓரடி வைத்து ஓரடிக்கும் எய்தாது மண் யென்று இமையோர் தொழுது ஏத்தி கைத்தாமரைக் குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே –11-3-6
பதவுரை Show / Hide
ஒளி விசும்பில், Oli Visumbil - (சந்திரன் ஸூரியன் முதலிய) சுடர்பொருள்கள் மிக்க  ஆகாசத்திலே
ஓர் அடிவைத்து, Oru Adivaiththu - ஒரு திருவடியை ஓங்கவைக்க
ஓர்அடிக்கும், Oru Adikkum - மற்றொரு திருவடிக்கு
மண் எய்த்தாது என்று, Man Eyththathu Endru - பூமி போதாதே! ஏன்று
இமையோர், Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்கள்
தொழுது எத்தி, Thozhu Etti - வணங்கித் துதித்து
கை, Kai - தங்களுடைய கைகளை
தாமரை குவிக்கும், Thamarai Kuvikkum - தாமரை மொக்குபோலே அஞ்ஜலிசெய்யப்பெற்று
என் கண்ணன் கண்ணனை, En Kannan Kannnai - எனக்குக் கண்போன்ற ஸ்ரீக்ருஷ்ணன்
அடியார், Adiyar - அடியவாக்ள்
மனத்தினில், Manathinil - தங்கள் நெஞ்சிலே
வைத்தர், Vaithar - நாட்டினார்கள்
வைத்து, Vaithu - அப்படி நாட்டியதனால்
இன்பம் உயர்த்தார், Inbam Uyarthar - ஆநந்தத்தை அடையப் பெற்றார்க்ள்.