திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1978 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய விடாய்-அவனை ஹிருதயத்திலே வைத்து அனுசந்தித்து ஆனந்தித்தவர்கள் அளவன்றிக்கே இரா நின்றதி – பிரத்யாசத்தி யன்றே சைதில்யத்துக்கு பரிகரம் –நான் கேட்டிருந்த படி ஒழிய கிட்டக் கொள்ள மற்றைப் படியேயாய் இருந்தது – ஒரு வசன மாத்ரத்தாலே பிறககுமவை போல் அன்றிக்கே விஷயா தீனமாக பிறக்குமவையாய் இருப்பது – இவை யென்ன ஆச்சர்யங்கள்) 7 | கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற விவை யென்ன மாயங்கள்
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க வவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே –11-3-7 | பதவுரை Show / Hideகண்ணன், Kannan - கண்ணபிரான் மனத்துள்ளே, Manathulle - (என்) நெஞ்சினுள்ளே நிற்கவும், Nirkavum - எழுந்தருளியிருக்கச்செய்தேயும் கை வளைகள், Kai Valaihal - (எனது) கையில்வளைகளானவை என்னோ கழன்று, Enno Kazhandru - ஏனோ கழன்று போயினவே! இவை என்ன மாயங்கள், Ivai Enna Mayangal - இவை என்ன ஆச்சரியம்! பெண் ஆனோம், Pen Anom - பெண்குடியிலே பிறந்துள்ளநாம் பெண்மையோம், Penmaiyom - வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாயிருக்கின்றோம் நிற்க, Nirka - இது நிற்க ஆவன்மேய, Aavanmeya - (அந்த எம்பெருமான் விரும்பி வர்த்திக்குமிடமாய் அண்ணல், Annal - சிறந்ததான மயலயம், Mayalayam - திருவேங்கட மலையையும் ஆரங்கமும், Arangamum - திருவரங்கத்தையும் பாடோமே, Padome - பாடுகைக்குத் தடையுடையரா யிருக்கிறோமோ? |