திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1979 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1979பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம பிராப்ய பூதனானவனை கிட்டுகையில் அருமை உண்டோ – அவன் நினையாமையாலே யன்றோ -என்னுதல் – நமக்கு அவன் பக்கல் ருசி இல்லாமை அன்றோ -என்னுதல்) 8
பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே –11-3-8
பதவுரை Show / Hide
நல் நெஞ்சே, Nal Nenje - நல்மனமே
எந்தை பெருமானை, Endai Perumanai - எம்பெருமானை
பாடோமே, Padome - பாடமாட்டோமோ?
ஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான அப்பெருமானை
பாடிநின்று, Paadininru - பாடி
ஆடோமே, Aadome - (மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக)  ஆடமாட்டோமோ?
போ;, Po - (அவனது) திருநாமங்களை
நினைத்து, Ninaiththu - சிந்தித்து
சூடும் துழாய் அலங்கல், Soodum Thuzhai Alangal - அவன் சாத்திக்கொள்ளுகிற திருத்துழாய் மாலையை
சூடோமே, Soodome - அணிந்துகொள்ளமாட்டோமோ?
சூடி, Soodi - அப்படி அணிந்துகொண்டு
கூட, Kooda - அவனோடு கூடுகைக்கு
குறிப்பு ஆகில், Kurippu Aagil - உன் இசைவு உண்டாகில்
நாம் கூடோமே, Naam Koodome - நாம் கூடப்பெற மாட்டோமோ?