Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 198 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
198பெரியாழ்வார் திருமொழி || 2-8 காப்பிடல் 7
கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7
கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய
சகடும், Sagadum - சகடாஸுரனையும்
மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி
உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ, Nee - நீ
பேயை, Peyai - பூதனையினுடைய
முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு
உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி
ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை;
ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்!
இது, Idhu - இப்போது
பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்;
பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய்