| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 198 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக. பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப் போகிறதில்லை யென்கிறாள். 7 | கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலை உண்ட பின்னை உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய் -2 -8-7 | கள்ளம், Kallam - வஞ்சனை யுடைய சகடும், Sagadum - சகடாஸுரனையும் மருதும், Marudhum - யமளார்ஜுநங்களையும் கலக்கு அழிய, Kalakku Azhiya - (வடிவம்) கட்டுக் குலைந்தழியும்படி உதை செய்த, Udhai Seydha - (திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய பிள்ளை அரசே, Pillai Arase - பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே! நீ, Nee - நீ பேயை, Peyai - பூதனையினுடைய முலை பிடித்து உண்ட பின்னை, Mulai pidithu unda pinnai - தாயாகவே நினைத்து முலையைப் பிடித்து (வாய் வைத்து) உண்ட பின்பு உள்ள ஆறு, Ulla aaru - உள்ள படி ஒன்றும் அறியேன், Ondrum ariyen - ஒன்றுமறிகிறேனில்லை; ஒளி உடை வெள்ளறை நின்றாய், Oli udai vellarai nindrai - ஒளி உடை வெள்ளறை நின்றாய்! இது, Idhu - இப்போது பள்ளி கொள் போது ஆகும், Palli kol podhu aagum - படுத்து உறங்குகிற வேளையாகும்; பரமனே!, Paramane! - அழகாலே மேம்பட்டவனே காப்பு இட வாராய் |