திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1981 | பெரிய திருமொழி || (11-3–மின்னிலங்கு) - (தலைவி இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கற்றோர்கள் பூமி அடங்கலும் ஆள்வர்கள்- கற்க வேண்டா – இவை கேட்போம் யென்று செவி தாழ்த்தார்க்கு அனுபவிக்க வேண்டியது ஒரு துயர் இல்லையே) 10 | பெற்றார் ஆயிரம் பேரானைப் பேர் பாடப்
பெற்றான் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
கற்றோர் முற்று உலகு ஆள்வர் இவை கேட்க
உற்றார்க்கு உறு துயர் இல்லை யுலகத்தே –11-3-10 | பதவுரை Show / Hideஆயிரம் பேரானை, Aayiram Peraanai - ஆயிரந்திருநாமங்களையுடையனான எம்பெருமானுடைய பேர், Pera - திருநாமங்களை பாடப் பெற்றாள், Padap Petraal - பாடப்பெற்றவரான கலியன், Kaliyan - ஆழ்வார் ஒலிசெய், Olisei - அருளிச்செய்த தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்ச் சொல்மாலையாகிய திருமொழியை கற்றார், Kattrar - கற்பவர்கள் பெற்றுஆரார், Petruaar - அந்த எம்பெருமானை லபித்தும் த்ருப்தியடைய மாட்டார்க்ள் முற்று உலக ஆள்வார், Muttru Ulaga Aalvaar - உலகங்கள் முழுவதையும் ஆளப்பெறுவாக்ள் இவை, Ivai - இப்பாசுரங்களை கேட்கல் உற்றார்க்கு, Kedkal Utrarkku - செவிதாழ்த்துக்கேட்கு மவாக்ளுக்கு உலகத்தே, Ulagatthae - உலகமெங்கும் உறு துயர் இல்லை, Uru Thuyar Illai - அநுபவிக்கக்கூடிய துக்க மொன்றுமில்லையாகும் |