திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1988 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆயிரம் இரண்டாயிரமுமாக ஒரு தொடையிலே தொடை யுண்ணும் செவ்விய அம்புகளை நடத்தின – இதடையச் செய்தது -ஸ்ரீ பிராட்டி பக்கல் பிச்சாலே இறே இப்படி தம் மார்பிலே அம்பை ஏற்று ரஷிக்குமவர் நமக்கு ரஷகர்-நமக்கு மேல் ஒரு குறை உண்டோ) 7 | இலை மலி பள்ளி யெய்தி யிது மாயம் யென்ன இன மாய மான் பின் எழில் சேர்
அலை மலி வேற் கணாளை அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா
கொலை மலி வெய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமால் நமக்கோர் அரணே –11-4-7 | பதவுரை Show / Hideஇலைமலி பள்ளி எய்தி, Ilaimali Palli Eydhi - பர்ணசாலையினருகே வந்து எழில் சேர், Ezhil Ser - மிக்க அழகையுடையளாய் ஆலை மலி வேல் கணாளை, Aalai Mali Vel Kanaalai - துன்பப்படுத்துமியல்வு பொருந்திய வேல் போன்ற திருக்கண்களை யுடையளான பிராட்டியை அகல்விப்ப தற்கு, Agalvippa Tharku - பிரிப்பதற்காக இனம் ஆய மான் பின், Inam Aaya Maan Pin - ஸஜாதியமான மான்களின்பின்னே இதுமாயம் என்ன, Idhumayam Enna - இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக ஓர்உரு ஆய, Oru Uru Aaya - விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த மானை, Maanai - (மாரீசனாகிற) மாயமானை அமையா, Amayaa - நிரஸித்து கொலைமலிவு எய்துவித்த கொடியோன், Kolaimalivu Eythuvitha Kodiyon - பரஹிம்ஸையையே தன்னிடத்துப் பூர்த்தியாகக் கொண்டிருந்தகொடியவனான இராவணனுடைய இலங்கை, Ilankai - லங்காபுரியானது பொடி ஆக, Podi Aaga - பொடிபடும்படி வென்றி அமருள், Vendri Amarul - வெற்றிப்போர்க்களத்திலே சிலை மலி செம் சரங்கள், Silai Mali Sem Sarangal - வில்லிலே நிறைந்த செவ்வியஅம்புகளை செல உய்த்த, Sela Uytha - பிரயோகித்த நங்கள் திருமால், Nangal Thirumaal - எம்பெருமான் நமக்கு ஓர் அரண், Namakku Oor Aran - நமக்கு ஒப்பற்ற சரண்யன் |