| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 199 | பெரியாழ்வார் திருமொழி || (2-8 காப்பிடல்) - அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தை விட்டு நான் காப்பிடும்படி விரைந்து வர வேணுமென்பதாம். \ கபாலி – ருத்ரனென்றுமாம். இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சை யெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு. 8 | இன்பம் அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் கும்பக் களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே செம் பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய் – 2-8 -8 | இன்பம் அதனை, Inbam adhanai - உன் குண சேஷ்டிதங்களால்) பரமாநந்தத்தை உயர்த்தாய், Uyarthaai - (எனக்கு) மேன் மேலுண்டாக்கினவனே! தொல்லை இன்பத்து இறுதி கண்டவள் அன்றோ இமையவர்க்கு, Imaiyavarkku - தேவர்க்கு என்றும், Endrum - எந்நாளும் அரியாய், Ariyaai - அருமையானவனே! கும்பம், Kumbam - மஸ்தகத்தையுடைய களிறு, KaLiru - குவலயாபீடத்தை அட்ட, Atta - கொன்ற கோவே, Koode - ஸ்வாமியே! கொடு, Kodu - கொடுமை தங்கிய கஞ்சன், Kanjan - கம்ஸனுடைய நெஞ்சினில், Nenjil - மநஸ்ஸிலே கூற்றே, Kootre - யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே! செம் பொன் மதிள் வெள்ளறையாய்!, Sem pon madhil vellaraiyaay! - செம் பொன் மதிள் வெள்ளறையாய்! செல்லத்தினால் வளர், Sellathinaal valar - செல்வச் செருக்கோடு வளர்கின்ற பிள்ளாய், Pillay - குழந்தாய்! அங்கு, Angu - நீ இருக்கிறவிடத்தில் கம்பம், Kambam - (கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்க வல்ல கபாலி காண், Kabali kaan - துர்க்கையாகும்; கடிது ஓடி காப்பு இட வாராய், Kadidhu odi kaappu ida vaaraay - (ஆகையால் அங்கு நில்லாமல்) மிகவும் விரைந்தோடி காப்பு இட வாராய் |