திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1990 | பெரிய திருமொழி || (11-4–நிலை) - (திருமாலின் திரு அவதாரங்களில் ஈடுபடுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ யசோதை பிராட்டி உரலோடு கட்ட அத்தைக் கொண்டோடின மிடுக்கை உடைத்தாய் – ஓன்று என்னலாம் படி நின்ற மருதுகள் முறிந்து விழும்படியாக-நடை கற்ற தெள்ளியவன் நம்முடைய பாபத்தை சவாசனமாக போக்கும்-இது நிச்சிதம்) 9 | துணை நிலை மற்று எமக்கோர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைப்
உண முலை முன் கொடுத்த வுரவோளதாவி உகவுண்டு வெண்ணெய் மருவி
பணை முலை யாயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே –11-4-9 | பதவுரை Show / Hideதொண்டர், Thondar - பாகவதர்காள் எமக்கு மற்று ஓர்அணைநிலை உனது என்று இராது, Emakku Matru Ooranjilai Unathu Endru Iradhu - நமக்கு வேறொரு ஆச்ரயமுண்டு என்று நினைத்திராமல் தொழுமின்கள், Thozhuminngal - எம்பெருமானை வணங்குங்கோள் முன், Mun - முன்பொருகால் தோலைய, Tholaiya - (கண்ணன்) முடிந்துபோக வெணுமென்றெண்ணி உண, Unna - அவன் உண்ணும்படியாக முலை கொடுத்த, Mulai Koduththa - (நஞ்சுதீற்றியதனது) முலையை (வாயில்) கொடுத்த உரவோனது, Uravonathu - வன்னெஞ்சினளான பூதனையினுடைய ஆவி உக, Aavi Uga - உயிர்மாளும்படி உண்டு, Undu - ஸ்தந்யபானம்பண்ணி வெண்ணெய் மருவி, Vennai Maruvi - வெண்ணெயை ஆசைப்பட்டு (க் களவு செய்ய) பணைமுலை ஆயர்மாதர், Panaimulai Aayarmathar - பருத்தமுலையையுடையளான யசோதைப் பிராட்டியானவள் உரலோடுகட்ட, Uralodukatta - உரலோடே பிணித்துவைக்க அதனோடும் ஓடி, Adhanodum Oodi - அவ்வுரலையுமிழுத்துக் கொண்டோடி இணை மருது, Inai Marudhu - இரட்டைமருதமரங்கள் இற்று வீழ, Itru Veezha - முறிந்துவிழும்படியாக நடை கற்ற, Nadai Katra - நடைபயின்ற தெற்றல், Thetral - தெளிவுள்ள சிறுகுழந்தை வினை பற்று அறுக்கும், Vinai Patru Arukkum - (நமது) ப்ரபங்களை வாஸனையோடே பொக்கியருளும் விதியே, Vidhiyey - இது திண்ணமே |