திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1992 | பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1 | மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1 | பதவுரை Show / Hideஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்)) மான் அமரும், Maan Amarum - மானையொத்த மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய போய், Poi - போய் காடு, Kaadu - காடுகளிலே உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண் சாழலே, Saalale - தோழீ! கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று காடு, Kaadu - காடுகளிலே உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க) மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண். |