திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1992 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1992பெரிய திருமொழி || (11-5–மானமரும்) (திருச்சாழல்) - (எம்பெருமானது எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காணேடீ — தோழமையால் ஏடீ -என்கிறது ஆதல் – பிராட்டியைக் கண்ட ப்ரீதியாலே ததிமுகனை குத்தினால் போலேஹர்ஷத்தாலே சொல்லுகிறாள் ஆதல் – இப்படி தன் ஸ்வரூபத்தை அழிய மாறி ஆஸ்ரித ரஷணத்துக்காக கிலேசப் பட்டவன் ஆனால் இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ – அவன் நிரதிசய ஆநந்த பரி பூர்ணனாய் இருக்கிறது நமக்காகவாய் இருந்த பின்பு இவ்வாத்மாவுக்கு ஒரு குறை உண்டோ) 1
மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் காணேடீ கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள் வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே –11-5-1
பதவுரை Show / Hide
ஏ, E - தோழீ! (- (நீ ஏத்திச் சொல்லுகிற புருஷன்) (என்று ஒருத்திசொல்ல) (மற்றொருத்தி அதற்கு மறுமாற்ற முரைக்கிறாள்))
மான் அமரும், Maan Amarum - மானையொத்த
மெல் நோக்கி, Mel Nookki - மென்மையான கண்களை யுடையவளான
கைதேவி, Kaithevi - விதேஹராஜவம்சத்துப் பிறந்தவளான ஸீதையை
இன் துணை ஆ, In Thunai Aa - இனிய துணைவியாகக் கொண்டு
கான் அமரும், Kaan Amarum - காட்டிலே பொருந்திய
போய், Poi - போய்
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்தான் காண், Uraindhaan Kaan - வாஸம்பண்ணினான் காண்
சாழலே, Saalale - தோழீ!
கான் அமரும் கல் அதர் போய், Kaan Amarum Kal Adhar Poi - காட்டிலே பொருந்திய கல்நிலைந்தவழியே சென்று
காடு, Kaadu - காடுகளிலே
உறைந்த, Uraindha - ஸஞ்சரித்த
பொன் அடிகள், Pon Adigal - திருவடிகளானவை
வானவர் தம், Vaanavar Tham - தேவர்களினுடைய
சென்னி, Sennai - முடியில் (அணியத்தக்க)
மலர் கண்டாய், Malar Kandaai - புஷ்பங்களாயிராநின்றன காண்.